Zodiac Signs That Are Good At Lying : பொய் பேசுவது என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல. ஆனால், இங்கு சில ராசிக்காரர்கள், அதனை மிகவும் அசால்டாக செய்வர். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
கடகம்:
அனைவரிடமும் மிகவும் ஈஸியாக பழகும் குணம் கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள். இவர்கள் கதை சொல்வதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். அந்தக் கதை ஒரு கட்டத்திற்கு மேல் பொய்கள் கலந்த கதையாகவும் மாறும். அந்த பொய்யை மறைக்க இவர்கள் மேலும் மேலும் பல பொய்கள் கூறும் நிலைக்கு தள்ளப்படுவர். இவர்களது பொய்யால் இவர்கள் மட்டுமல்ல இவர்களைச் சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு பிறரது கவனம் முழுவதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமாம். இதற்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களாம். இப்படி பொய் கூறுவதை எவ்வளவு தான் இவர்கள் கட்டுப்படுத்த நினைத்தாலும், புகழ் போதை மற்றும் ஒரு விஷயத்தை தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொய் கூறுவார்களாம். இவர்கள் பொய்யை விட்டாலும் பொய் இவர்களை விடாது என கூறப்படுகிறது. இவர்கள் பொய் பேசுவதை கண்டுபிடிப்பது எப்படி என்றால் அவர்கள் கண்களையே பார்க்க வேண்டும். தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால், தனது வார்த்தை ஜாலத்தால் எதை வேண்டுமானாலும் உண்மையாக கூறும் இவர்கள், பல சமயங்களில் மனசாட்சியற்றவர்களாக இருப்பர் என்றும் சிலர் கணிக்கின்றனர்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு உண்மையில் அவர்களுக்கு ஏற்றவாறு இல்லை என்றால், அதனை தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வார்களாம். இது அவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கும் என கூறப்படுகிறது. தன்னை சமூகத்துடன் தொடர்புடைய மனிதர் என்னும் பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக, இவர்கள் இப்படி பொய் கூறுவர் என கூறப்படுகிறது. தன்னைப் பற்றி தவறாக ஏதேனும் கூற்றுகள் எழுந்து விடுமோ என்ற எண்ணத்தினால் இவர்கள் இப்படி பொய் பேசுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் ஏதேனும் காரணத்திற்காக என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டார்களாம். அவர்களுக்குப் போய் கூறுவதற்கும் மிகவும் பிடித்திருக்குமாம். பொய் பேசும்போது அதனை முகத்தில் காட்டாமல், எவ்வளவு அழகாக இவர்களுக்கு அதனை உண்மை போல கூறத் தெரியுமாம். இந்தப் பொய் பிறருக்கு தெரிந்து விட்டாலும் கூட அதிலிருந்து உடனே தப்பித்து விடுவார்களாம். இப்படி பல பொய்கள் கூறும் இவர்கள், அதன் மூலமாகவே ஒரு நாள் சிக்கிக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.
துலாம்:
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு பொதுவாக பொய் சொல்வது என்பது பிடிக்காது. ஆனால் ஒரு சூழல் வருகையில், அதில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக பொய் கூறுவார்களாம். அந்த பொய்யை பிறர் கண்டுபிடித்து விடக்கூடாது என்று நினைக்கும் இவர்கள் அதற்காக அதனை மறைக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் சொல்லும் பொய், பொய் மாதிரியே இருக்காதாம். உண்மையை தனக்கு ஏற்றவாறு கொஞ்சம் வளைத்து நெளித்து, சிக்கிக் கொள்ளாதவாறு பொய் கூறுவார்கள் என கூறப்படுகிறது. இந்த பொய்களால் ஒரு நாள் அவர்களே ஒரு நாள் மாட்டிக்கொள்வார்கள் என்றும், கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | நேர்மையை உயிர் மூச்சாக கருதும் 4 ராசிகள்! யாரெல்லாம் தெரியுமா?
மேலும் படிக்க | மன வலியை சிரிப்பால் மறைக்கும் 5 ராசிகள்! யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ