5 Zodiac Signs With Sharp Minds : புத்திசாலித்தனம் என்பது, ஒருவர் ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக்கொள்ளும் விஷயமாக இருக்கும். அல்லது, ஒரு சிலர் தவறுகளை செய்து அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு பின்பு புத்திசாலித்தனதை கற்றுக்கொண்டவர்களாக இருப்பர். இப்படித்தான், ஒரு சில ராசிக்காரர்களுக்கு, பிறக்கும் போதே புத்திசாலித்தனம் அதிகமாக இருக்குமாம். அவர்கள் யார் யார் தெரியுமா?
மிதுனம்:
இந்த ராசிக்காரர்கள், எந்த ஒரு விஷயத்தையும் டக்கென பிடித்துக்கொள்பவர்களாக இருப்பார்கள். தூய தமிழில் சொல்ல வேண்டும் என்றால், கர்பூர புத்தி கொண்டவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்ல, எங்கு சென்றாலும், அந்த சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஏதேனும் பிரச்சனை வருவதை அறிந்து கொண்டால், வேகமாக யோசித்து, வேகமாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அது அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கும் இவர்கள், அதனை பிறருக்கும் எளிய விதத்தில் கற்றுக்கொடுப்பார்களாம். ஏதாவது ஒரு விஷயத்தில் மாட்டிக்கொண்டாலும் கூட, அதிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியும் என கூறப்படுகிறது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள், எப்போதும் நுணுக்கமான மற்றும் கவனம் மிக்க சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்களாம். அதே போல, பிறர் பார்க்க தவறும் விஷயங்கள், இவர்கள் கண்களில் இருந்து தவறவே தவறாதாம். பிரச்சனையை தீர்ப்பதிலும், ஒரு விஷயத்தை ஒழுங்கு படுத்துவதிலும் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்குமாம். ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் இவர்கள், எதையும் போட்டு பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் நேரடியாக அதற்கு தீர்வு காண்பவர்களாக இருப்பார்களாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள், கற்பனை ஆற்றல் மிக்கவர்களாகவும் கூர்மையான புத்தி கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இதுவே, இவர்களை இக்கட்டான தருணத்திலும் வித்தியாசமாக யோசிக்க வைக்கும். எந்த சூழலாக இருந்தாலும், தான் வந்த வேலையை முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட இவர்கள், அதனை முடிக்காமல் நகர மாட்டார்களாம். இப்படி வித்தியாசமாக யோசிக்கும் இவர்களின் இந்த திறன்தான் இவர்களை எவ்வளவு கடினமான பிரச்சனையாக இருந்தாலும் தீர்க்க உந்துதல் கொடுக்குமாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள், முன்னெற்ற பாதையை நோக்கி சிந்திப்பவர்களாக இருப்பார்களாம். இவர்களி சிந்தனைகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், இதிலிருந்து பலர் பயன் பெறுவதாக கூறப்படுகிறது. இயற்கையாகவே அனைத்து விஷயங்களிலும் ஆர்வத்துடன் இருக்கும் இவர்கள், தாங்கள் எந்த காலத்தில் வாழ்கிறோமோ அதனை தாண்டி யோசிப்பார்களாம். அனைத்தையும் பிரித்து பார்த்து ஆராயும் சிந்தனை கொண்ட இவர்கள், எதை தவறாக செய்தாலும், சரியாக செய்தாலும், அதனை கண்டு கொண்டு, மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்றால் அதனை தேர்ந்தெடுப்பவர்களாக இருப்பார்களாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள், சுய ஒழுக்கம் மற்றும் வித்தியாசமான சிந்தனைகளுக்கு பெயர் போனவர்களாக இருப்பார்களாம். நெடுங்கால இலக்குகளை அடைவதில் பெயர் பெற்ற இவர்கள், அதற்காக தங்களில் வாழ்வியல்களையும் மாற்றிக்கொள்வர் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ