)
Aadi 2025 Reason Why Koozh Is Served : அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் தொடங்கிவிட்டது. பூமியில் பூமிதேவி அம்மனாக அவதரித்த இந்த மாதத்தை தான் நாம் ஆடி மாதமாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில் சிவனுடைய சக்தியை விட பார்வதி தேவை அதாவது சக்தியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று சிலர் கூறுவதுண்டு. இந்த மாதத்தில் மட்டும் சிவன், தனது இன்னொரு பாதியான சக்திக்குள் பக்கமாக விடுவார் என்பதும் அது அதிகமாக சொல்லப்படுகிறது. இதனால், இந்த மாதத்தில் பக்தர்கள் அம்மன் கோயில்களுக்கு படையெடுப்பதுண்டு. இந்த மாதத்திற்கு, அம்மனின் அருள் இப்படி பெயர் போனதோ அதேபோல, கூழும் பெயர் போனது.
ஆடி மாதத்தில், மாரியம்மன், காளியம்மன், துலுக்கானத்தம்மன் என்று பல்வேறு அம்மன் காேயில்களில் விஷேச பூஜைகள் செய்து கூழ் ஊற்றுவர். கோயில்களில் மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக இந்த வழக்கத்தை பின்பற்றுபவர்களும் தங்கள் வீட்டிற்கு உறவினர்களை-நண்பர்களை அழைத்து கூழ் ஊற்றுவதுண்டு. பிற நாட்களில் பல இடங்களில் கூழ் கிடைத்தாலும், ஆடி மாதத்தில் கிடைக்கும் கூழ் மட்டும் சிறப்பு மிக்கதாக கூறப்படுகிறது. இது ஏன்? இந்த மாதத்தில் கூழ் ஊற்றுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது குறித்து, பிரபல ஆன்மீக பேச்சாள்ர், சிவ.சதீஸ்குமார் ஒரு யூடியூப் சேனலில் பேசியிருந்தார். அதில், அவர் இதற்கான காரணத்தை கூறினார். ”ஆடி காற்றில் அம்மியும் நகரும்” என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால், அதன் உண்மையான வார்த்தைகள், “ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்” என்பதுதான்.
இந்த மாதத்தில், ஆடி மாதம் அதிகமாக இருக்கும் காற்றில் அம்மை நோய் பரவுமாம். இதை கட்டுப்படுத்த நினைத்த பெரியவர்கள், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கம்பு-கேழ்வரகு ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டுமென நினைத்தனர். இதற்காகத்தான் அடி மாதத்தில் அனைவரும் கூழ் குடிக்க வேண்டும் என்கிற நிலை வந்ததாம்.
கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்?
அரிசியை விட, அதிக விலையுடைய தானியங்கள் கம்பு, கேழ்வரகு. இவற்றை அனைவராலும் வாங்கி சாப்பிட முடியாது. பணம் இருப்பவர்கள், வீட்டில் கூழ் செய்து சாப்பிடலாம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? என யோசித்த பெரியவர்கள், கோயிலில் கூழ் ஊற்றினால் அனைவரும் வந்து அதை குடித்து பயன்பெறலாம் என்ற நோக்கில் இப்படி கோயிலில் கூழ் ஊற்றும் வழக்கத்தை ஆரம்பித்தனர். அதே போல, கோயிலில் ஊற்றும் கூழில் வேப்பிலையும் போடுவர். இதனால், உடலுக்கு இன்னும் கூடுதலாக பலம் கிடைக்குமென சொல்லப்படுகிறது.
ஆடி மாதத்தில் எந்தெந்த நாட்களில் கூழ் ஊற்றலாம்?
ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. எனவே, பலர், ஆடி முதல் வெள்ளி அல்லது ஞாயிரில் கூழ் ஊற்றுவதுண்டு. அதே போல, ஆடி செவ்வாய்க்கிழமைகளிலும் சிலர் கூழ் ஊற்றுவர். இந்த மாதத்தில், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பெருக்கு, ஆடி பூரம், ஆடி கிருத்திகை உள்ளிட்ட பண்டிகைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ