)
Benefits Of Aadi Pournami Worship In Tamil: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது தெய்வீகத்திற்கும், வழிபாட்டிற்கும் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி திதி, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் அற்புத தினமாகவும் பார்க்கப்படுகிறது. ஆடி பெளர்ணமி நாளில் மேற்கொள்ளப்படும் விரதங்களும், வழிபாடுகளும் பன்மடங்கு பலன்களைத் தரும் என்பது ஐதீகம். ஆடி பெளர்ணமி 2025 குறித்து விவரங்களை பார்ப்போம்.
2025 ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2.50 மணி முதல் மறுநாள் ஆகஸ்ட் 9 ஆம்தேதி சனிக்கிழமை மதியம் 2.26 மணி வரை ஆடி பௌர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில் பௌர்ணமி கிரிவலம், பௌர்ணமி பூஜை கடைப்பிடிக்கலாம்.
ஆடி செவ்வாயுடன் ஆடி பௌர்ணமியும் சேர்த்து வருவதால் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம். ஆடி பௌர்ணமி அன்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். அம்மனுக்கு கூழ், பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு. பெண் குழந்தைகள் மற்றும் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம், மங்கல பொருட்கள் வழங்குவது சிறந்தது.
ஆடி பௌர்ணமி அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பகலில் உணவு உண்ணாமல் இருந்து, மாலை வேளை வழிபாட்டிற்கு பின் உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
சிவன் - விநாயகர்: குல தெய்வம் பெண் தெய்வம் எனில் இந்நாளில் வழிபாடு செய்வது அவசியம். ஆடி பௌர்ணமியில் சிவனுடன், விநாயகரையும் சேர்த்து வழிப்படுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.
மூங்கில் அரிசி பாயாசம்: சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து வழிபட வேண்டும். மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் பகை விலகும், வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும். சிவபெருமானுக்கு நார்த்தம் பழம் சாதமும் நேவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
அம்மன் வழிபாடு: வீட்டில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அம்மன் கோவில்களுக்கு சென்று அம்மனுக்கு பூமஞ்சள் அல்லது சிகப்பு நிற புடவை, மாலை அணிவித்து பாலாபிஷேகம், பழங்கள் கலந்த நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.
திருமால் வழிபாடு: ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வதும் சிறப்பாகும். திருமாலை வழிப்படுவதன் மூலம் குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும். பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.
- திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மக்கட்பேறு உண்டாகும்.
- வியாபாரத்தில் ஏற்படும் தடைகள் நீங்கி, லாபம் பெருகும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும்.
- கல்வியில் மந்தமாக இருக்கும் குழந்தைகள், படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- நோய் நொடிகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மகாலட்சுமி அருள்: வருடத்தின் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று ஆடி பௌர்ணமி. இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். பௌர்ணமி தினத்தில் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவது குலதெய்வத்தின் பரிபூர்ண அருளை பெற்றுத் தரும். அதே போல் இந்த நாளில் சத்யநாராயண பூஜை செய்வதால் வறுமை நீங்கும். பௌர்ணமி அன்று செய்யும் வழிபாடுகள் மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.
குலதெய்வ வழிபாடு: குறிப்பாக குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாக பௌர்ணமி கருதப்படுகிறது. சந்திரனின் ஆற்றல்கள் அதிகரிக்கும் நாளில் அம்மன் வழிபாடும், தீப வழிபாடும், சிவ வழிபாடும், மதிற ஜபம், தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதும் மிகவும் உயர்ந்த பலன்களை தரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ