)
Ways To Purchase Ganesha Idol: இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், புதிய விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு, பின்னர் நீரில் கரைப்பார்கள். விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று வருகிறது.
விநாயகர் சிலை வாங்கும் பொழுதும், விநாயகரை தண்ணீரில் கரைக்கும் முன் என்ன செய்ய வேண்டும், விநாயகரை வழிபட உகந்த நேரம் மற்றும் விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வழிபட வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம்.
1. விநாயகர் சிலை வாங்குவதற்கு என்று சில முறைகள் உள்ளன.
2. உட்கார்ந்து இருக்கும் விநாயகரை தான் வாங்க வேண்டும்.
3. நின்று கொண்டிருக்கும் விநாயகரை வாங்க கூடாது.
4. திருஷ்டி விநாயகர் வாங்கக்கூடாது
5. விநாயகருடைய துதிகை இடது பக்கமாக திரும்பி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
6. நிறம் பார்த்து வாங்குவது அவசியம்.
7. விநாயகர் சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் வாங்க வேண்டும்.
8. இந்த நிறத்தில் இருக்கும் விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம், செல்வம், ஞானம், நிறைவான செல்வம் ஆகியவை கிடைக்கும் என நம்பிக்கை
1. விநாயகர் சதுர்த்தியில் இருந்து முதல் மூன்று நாளைக்கு அசைவம் சாப்பிடக்கூடாது.
2. வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும்.
3. வீட்டில் பிள்ளையார் சிலை வைத்து இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் விளக்கு ஏற்ற வேண்டும்.
4. பிள்ளையாரை கரைக்கும் வீட்டில் வெங்காயம் மற்றும் இஞ்சி வைத்து சமைக்க கூடாது.
5. வீட்டில் சிலையை வாங்கிய பின் சிலையை கரைக்கும் வரை வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று அசைவம் சாப்பிடக்கூடாது.
6. சிலையை வீட்டிற்கு கட்டாயம் மூன்று நாள் முன்னரே வாங்கி வந்து வழிபட வேண்டும். தினமும் ஒரு நெய்வைத்தியம் வைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல், வெள்ளெருக்கு சாற்றி, மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, சுண்டல், பழங்கள் போன்றவை நைவேத்தியமாக படைத்து 'ஓம் கம் கணபதயே நமஹ' என்ற மந்திரத்தை கூறி வழிபட துன்பங்கள் நீங்கும்.
1. ஆகஸ்ட் 27, ஆவணி 11, அன்று விநாயகர் சதுர்த்தி,
2. சதுர்த்தி திதி ஆகஸ்ட் 26 பிற்பகல் 2:21 முதல் ஆகஸ்ட் 27 மாலை 03:52 வரை
3. விநாயகர் சதுர்த்தி அன்று, நல்ல நேரம் காலை 09:15 முதல் 10:15 வரை மாலை 01:45 முதல் 02:45 வரை
4. கௌரி நல்லநேரம் 10:45 முதல் 11:45 வரை இந்த நேரத்தில் விநாயகரை பூஜித்து வழிபடலாம்.
5. விநாயகருக்கு உகந்த நாளான புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ