அட்சய திருதியை 2025 ராசிபலன்: எந்த ராசிக்காரர்கள் என்ன வாங்க வேண்டும்? என்ன தானம் செய்ய வேண்டும்?

Akshaya Tritiya 2025: அட்சய திருதியை அன்று உங்கள் ராசிக்கு ஏற்ப என்ன வாங்கலாம்? என்ன தானம் செய்யலாம்? இந்த விவரங்களை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 29, 2025, 03:17 PM IST
  • அட்சய திருதியை பண்டிகை இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படும்.
  • இந்த முறை அட்சய திருதியை அன்று பல சுப யோகங்கள் ஒன்று சேரப் போகின்றன.
  • அட்சய திருதியை அன்று கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.
அட்சய திருதியை 2025 ராசிபலன்: எந்த ராசிக்காரர்கள் என்ன வாங்க வேண்டும்? என்ன தானம் செய்ய வேண்டும்?

Akshaya Tritiya 2025: அட்சய திருதியை பண்டிகை இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, அதாவது நாளை கொண்டாடப்படும். இந்த முறை அட்சய திருதியை அன்று பல சுப யோகங்கள் ஒன்று சேரப் போகின்றன. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை அட்சய திருதியை அன்று கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. அதே நேரத்தில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்ஷய திருதியை நாளில் அக்ஷய யோகத்தின் மிகவும் புனிதமான நிகழ்வு உருவாகப் போகிறது. 

Add Zee News as a Preferred Source

முன்னதாக, 2001 ஆம் ஆண்டு அக்ஷய திருதியை தினத்தன்று அக்ஷய யோகம் உருவானது. இப்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபூர்வ நிகழ்வு உருவாகியுள்ளது. வேத ஜோதிடத்தின் படி, அக்ஷய யோகம் ஒருவருக்கு அக்ஷய புண்யத்தை அடைய உதவுகிறது. 

அட்சய திருதியை அன்று, அட்சய புண்ணியத்தை அடைய, மனிதர்கள் தங்கள் ராசிக்கு ஏற்ப தானங்கள் செய்ய வேண்டும், பொருட்களை வாங்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் அதிகமாகும், வெற்றிக்கான கதவுகள் திறக்கும். அட்சய திருதியை அன்று உங்கள் ராசிக்கு ஏற்ப என்ன வாங்கலாம்? என்ன தானம் செய்யலாம்? இந்த விவரங்களை இங்கே காணலாம்.

மேஷம்: அரிசி தானம்

மேஷ ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று அரிசி தானம் செய்ய வேண்டும். மேலும், இந்த நன்னாளில் தங்கம் வாங்கலாம். இந்த நாளில் தங்கம் வாங்க முடியாவிட்டால், அரிசி தானம் செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏழைகளுக்கோ அல்லது துறவிகளுக்கோ அரிசி தானம் செய்வது உகந்தது. அட்சய திருதியை அன்று இந்த தானம் செய்தால், நிதி நன்மைகள் ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.

ரிஷபம்: பழங்கள் தானம்

அட்சய திருதியை நாளில், தங்கம் மற்றும் வெள்ளி தானம் செய்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். தங்கம், வெள்ளி தானம் செய்ய முடியாதவர்கள் இந்த நாளில் பழங்களையும் தானம் செய்யலாம். இதன் மூலம் அட்சய திருதியை நாளில், உங்கள் நல்லொழுக்கத்திற்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெறுவீர்கள். அட்சய திருதியை நாளில் கல் உப்பு வாங்குவது நன்மை பயக்கும்.

மிதுனம்: வெள்ளரிக்காய் தானம்

அட்சய திருதியை நாளில், மிதுன ராசிக்காரர்கள் 11 அல்லது 21 வெள்ளரிகளை தானம் செய்யலாம். இந்த நாளில் வெள்ளி வாங்குவது உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நாளில் உங்கள் வருவாய் நன்றாக இருக்கும். இந்த தானங்கள் மூலம் வாழ்வில் பண வரவு அதிகமாகும். 

கடகம்: ஆடை தானம்

அட்சய திருதியை தினத்தன்று, கடக ராசியில் பிறந்தவர்கள் அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லத்திற்குச் சென்று உணவுப் பொருட்கள் அல்லது ஆடைகளை தானம் செய்யலாம். இதன் மூலம் இவர்களுக்கு மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி அன்னையின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும். மேலும், பழங்கள் அல்லது புதிய ஆடைகளை தானம் செய்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும். இந்த நாளில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிம்மம்: அன்னதானம்

அட்சய திருதியையின் நல்ல பலன்களைப் பெற, சிம்ம ராசிக்காரர்கள் இந்த நாளில் ஏழைகளுக்கு, நலிந்தோருக்கும்  உணவளிக்க வேண்டும். உங்களால் முடிந்தால் தங்கமும் தானம் செய்யலாம். மேலும், இந்த நாளில் தங்க நகைகளை வாங்குவது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். 

கன்னி: விசிறி மற்றும் தண்ணீர் தானம்

அட்சய திருதியை நாளில், கன்னி ராசிக்காரர்கள், கோவிலில் பருவகால பழங்கள், விசிறிகள் மற்றும் தண்ணீர் தானம் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, தங்கம் வாங்குவதும், மலர்கள் வாங்குவதும் நல்லது. இவற்றின் மூலம் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள்.

துலாம்: பால் மற்றும் தயிர் தானம்

அட்சய திருதியை அன்று துலாம் ராசிக்காரர்கள் பால், மாவு, தயிர் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். இந்த நாளில் வெள்ளி வாங்கினால் உங்கள் வாழ்க்கையில் குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் வரும். இந்த ராசிக்காரர்கள் லாபத்துடன் செலவுகளையும் எதிர்கொள்வார்கள். வீட்டின் பெரியவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். திடீர் லாப நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்: இனிப்பு தானம்

அட்சய திருதியை தினத்தன்று, விருச்சிக ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் இனிப்புகளை தானம் செய்வது மங்களகரமானதாகக் கருதப்படும். இந்த நாளில் செம்பு பொருட்களை வாங்குவது உங்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். உலோகத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.

தனுசு: பழங்கள் தானம்

அட்சய திருதியை நாளில், மாம்பழம், தர்பூசணி, முலாம்பழம் போன்ற பருவகால பழங்களை ஏழை மக்களுக்கு தானம் செய்வது உங்களுக்கு மன அமைதியை அளிக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் தங்கம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்.

மகரம்: இனிப்பு தானம்

அட்சய திருதியை தினத்தன்று, மகர ராசிக்காரர்கள் இனிப்புகளை தானம் செய்ய வேண்டும். இந்த நாளில் புதிய தளபாடங்கள் வாங்குவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். மேலும், இந்த நாளில் நல்ல காரியங்களை செய்யத் தொடங்கினால், அவை உங்களை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

கும்பம்: சிறுதானியங்கள் தானம்

அட்சய திருதியை அன்று, கும்ப ராசிக்காரர்கள் சிறுதானியங்களை தானம் செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, கல் உப்பு ஆகியவற்றை வாங்குவது நல்லது. இந்த நாளிலிருந்து புதிய வேலைகளை தொடங்குவது உங்களுக்கு அவற்றில் மிகப்பெரிய வெற்றியை அளிக்கும். 

மீனம்: மஞ்சள் நிற பொருட்கள் தானம்

அட்சய திருதியை தினத்தன்று, மீன ராசிக்காரர்கள் சிறந்த பலன்களைப் பெற மஞ்சள் நிற உணவுப் பொருட்கள் அல்லது பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும், இந்த நாளில் மஞ்சள், தங்கம், வெள்ளி, கல் உப்பு ஆகியவற்றை வாங்குவது லாபத்தை அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | கணவன் மனைவி பக்காவான ஜோடி இந்த 3 ராசிகள்....மனதை புரிந்துகொண்டு வாழ்வார்கள்!

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பல கிடைக்கும், முழு ராசிபலன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News