அட்சய திருதியை 2025: உருவானது அக்ஷய யோகம்... இன்று முதல் செல்வச்செழிப்பில் திளைக்கப்போகும் 5 ராசிகள்

Akshaya Tritiya 2025 Horoscope: அக்ஷய திருதியை அன்று உருவாகும் அக்ஷய யோகத்தால், இன்று முதல் அக்ஷய பலன்கள் கிடைத்து அதிக செல்வச்செழிப்புடன் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2025, 10:15 AM IST
  • கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை முதல் அன்னை லட்சுமியின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
  • வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும்.
  • குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும்.
அட்சய திருதியை 2025: உருவானது அக்ஷய யோகம்... இன்று முதல் செல்வச்செழிப்பில் திளைக்கப்போகும் 5 ராசிகள்

Akshaya Tritiya 2025 Horoscope: இன்று அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் ஜோதிட மற்றும் ஆன்மீக ரீதியாக எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மத ரீதியாகவும் முக்கியமான பண்டிகையாக உள்ளது. ஜோதிடத்தில், சந்திரனும் குருவும் ராசியிலிருந்து இரண்டாவது, ஆறாவது, பத்தாவது மற்றும் பதினொன்றாவது வீட்டில் இணையும் போது, ​​அக்ஷய யோகம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. இன்று, அக்ஷய திருதியை நாளில், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்தில் குருவுடன் இணைந்து, ஒருபுறம், கஜகேசரி யோகத்தையும், மறுபுறம், அக்ஷய யோகத்தின் மூலம் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு அக்ஷய பலன்கள் கிடைக்கும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. 

Add Zee News as a Preferred Source

Akshaya Yogam: 24 ஆண்டுகளுக்கு பின் அக்ஷய திருதியை நாளில் உருவாகும் அக்ஷய யோகம்

24 ஆண்டுகளுக்குப் பிறகு அக்ஷய திருதியை அன்று அக்ஷய யோகமும் உருவாகிறது. இதற்கு முன்பு, ஏப்ரல் 26, 2001 அன்று அக்ஷய திருதியை நாளில் அக்ஷய யோகம் உருவானது. அக்ஷய திருதியை அன்று உருவாகும் அக்ஷய யோகத்தால், இன்று முதல் அக்ஷய பலன்கள் கிடைத்து அதிக செல்வச்செழிப்புடன் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்: கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்

மேஷ ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை முதல் இனி வரும் நாட்கள் மிகவும் மங்களகரமானதாக இருக்கவுள்ளன. மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும். இந்த நாளில் நீங்கள் புதிய வேலையைத் தொடங்கலாம். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். குறிப்பாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். உங்கள் பெற்றோர், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் குறித்து நீங்கள் கவலையின்றி இருக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். அன்னை லட்சுமி மற்றும் குபேரரின் ஆசிர்வாதத்தால், உங்கள் நிதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

மேஷ ராசிக்கான அக்ஷய திருதியை பரிகாரங்கள்: அக்ஷய திருதியை நாளில், பிரதான நுழைவாயிலில் நெய் விளக்கேற்றி, ஏழைகளுக்கு உணவு தானம் செய்யுங்கள்.

ரிஷபம்: வருமானம் அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை முதலான காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கலைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் பொறுமையாக முடிவுகளை எடுப்பீர்கள், இது எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தைத் தரும். உங்கள் எதிரிகள் கூட ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் புத்திசாலித்தனத்தையும் விவேகத்தையும் நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்துவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, ​​உங்கள் ஆடம்பரங்களும் வசதிகளும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்கான அக்ஷய திருதியை பரிகாரங்கள்: அக்ஷய திருதியை அன்று தேவைப்படுபவர்களுக்கு பழங்கள், தண்ணீர் பானைகள் அல்லது பால் தானம் செய்யுங்கள். ஸ்ரீயந்திரத்தை வழிபடுவதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

கடகம்: வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும்

கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை முதல் அன்னை லட்சுமியின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். இந்த நேரம் வணிகக் கண்ணோட்டத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும். சகோதரர்களுடன் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். இது மட்டுமல்ல, உங்கள் மரியாதையும் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் நெருங்கிய நண்பர்களின் ஆதரவு உங்கள் பாதையை எளிதாக்கும். நீங்கள் மன ரீதியாக மகிழ்ச்சியாக உணர்வீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அட்சய திருதியை முதல் உங்கள் விருப்பங்கள் நிறைவேறலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

கடக ராசிக்கான அக்ஷய திருதியை பரிகாரங்கள்: அட்சய திருதியை அன்று, ஏழைகளுக்கு மஞ்சள் நிற சாதம் அல்லது மஞ்சள் நிற இனிப்புகளை அளிக்கலாம். மேலும் பழங்கள் போன்றவற்றையும் தானம் செய்யலாம்.

சிம்மம்: லாபம் ஈட்ட அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

அட்சய திருதியை முதல், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கடந்த காலத்தில் செய்த நல்ல செயல்களின் பலன்களைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள பணிகள் அற்புதமாக செய்து முடிக்கப்படும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. லாபத்தால் மனம் மகிழ்ச்சியடையும். சௌகரியமும் ஆடம்பரமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை கூடும். முன்னேற்றப் பாதையில் முன்னேறுவீர்கள்.

சிம்ம ராசிக்கான அட்சய திருதியை பரிகாரங்கள்: அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. நெய் தானம் செய்யலாம்.

தனுசு: உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உங்கள் எதிரிகள் கூட ஆச்சரியப்படுவார்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை முதல் நிம்மதியான காலம் தொடங்கவுள்ளது. உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து நீங்கள் சிறிது நிவாரணம் பெறலாம். நீதிமன்ற வழக்குகளிலும் நிவாரணம் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் தொழிலை விரிவுபடுத்தத் திட்டமிடுபவர்களுக்கு கடன்கள் போன்றவை கிடைக்கக்கூடும். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உங்கள் எதிரிகள் கூட ஆச்சரியப்படுவார்கள். அன்னை லட்சுமியின் சிறப்பு ஆசீர்வாதத்தால் உங்கள் வேலை துரிதப்படுத்தப்படும். சம்பாதிக்க வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நேர்மையாகச் செய்யப்படும் கடின உழைப்பிற்கு நல்ல் பலன் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். 

தனுசு ராசிக்கான அட்சய திருதியை பரிகாரங்கள்: அன்னதானம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்

மேலும் படிக்க | மே மாதத்தில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல்!

மேலும் படிக்க | தினசரி ராசிபலன், சித்திரை 17: இந்த 4 ராசிகளுக்கு அதிக பொறுமை வேண்டும் - ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News