)
ஜாதக தோஷத்தினாலும், கிரக நிலைகளாலும் சிலருக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் விடாமல் துரத்திக் கொண்டிருக்கும். அந்த வகையில் ஜாகத்தில் குருவின் நிலை வலுப்பெறவும், குரு பகவானின் அருளைப் பெற்று வாழ்க்கை இன்பங்கள் அனைத்தையும் பெறவும், இன்னல்கள் நீங்கவும், வியாழன் அன்று செய்யப்படும் சில பரிகாரங்களை கை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
வியாழக்கிழமை பரிகாரங்கள் ஜாதகத்தில் குருவின் நிலையை பலப்படுத்துகின்றன
குரு வாரம் என கூறப்படும் வியாழக் கிழமைக்கு தனி முக்கியத்துவம் உண்டு. உலகையே காத்து ரட்சிக்கும் மகா விஷ்ணுவுக்கு உகந்த நாள். இந்த நாளில் விஷ்ணுவையும், மகா லட்சுமி தேவியையும் வழிபடுவதன் மூலம் வாழ்வில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம். வியாழக்கிழமை பரிகாரங்கள் ஜாதகத்தில் குருவின் நிலையை பலப்படுத்துகின்றன. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் அதிர்ஷ்டத்திற்கு காரணமாக இருக்கும் கிரகம் குரு பகவான் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்க உதவும் வியாழக்கிழமை பரிகாரங்கள்
1. சனாதன தர்ம நம்பிக்கையின்படி, சந்தனம், மஞ்சள் மற்றும் துளசி மாலைகள் விஷ்ணு மற்றும் தக்ஷிணாமூர்த்தி வழிபாட்டிற்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதனை பயன்படுத்தி வழிப்பட்டு வந்தால், குரு பகவானின் ஆசியை பரிபூரணமாக பெறலாம்
2. உங்கள் ஜாதகத்தில் குரு எப்போதும் நல்ல பலன்களைத் தர வேண்டும் என்று விரும்பினால், அவ்வப்போது கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி போன்ற புனித நதிகளின் கரைகளுக்குச் சென்று குளித்து, தானம் செய்து, வழிபட்டு வர வேண்டும்.
3. ஏதாவது காரணத்தால் நீங்கள் நதிக்கரைகளுக்குச் செல்ல முடியாவிட்டால், குரு தோஷம் நீங்க, வியாழக்கிழமை அன்று குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் குளிக்கலாம். குளிக்கும் போது, 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உச்சரிப்பது பலன் தரும். முடிந்தால் வியாழன் அன்று மஞ்சள் நிற ஆடைகளை அணியலாம்.
4. உங்கள் ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாகி நல்ல பலன்களைத் தர விரும்பினால், நீங்கள் எப்போதும் ஆன்மீக குருக்களை மதிக்க வேண்டும், அவ்வப்போது உங்கள் குருவிடம் சென்று அவருக்கு சேவை செய்து அவரது ஆசிர்வாதங்களைப் பெற வேண்டும். குருவின் ஆசிர்வாதத்தை விரும்பும் ஒருவர் எந்த சன்னியாசிகள், குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள், ஆன்மீக குருக்கள் அல்லது வேதங்களை அவமதிக்கக்கூடாது. குருவுடன் சேர்ந்து ஒரு பசுவையும் சேவிக்க வேண்டும்.
5. சனாதன பாரம்பரியத்தில், மரங்களும் செடிகளும் கடவுள் தெய்வங்களுக்குச் சமமாகக் கருதப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வியாழனுடன் தொடர்புடைய துளசி, அரச மரம் மற்றும் வாழை மரம் போன்ற தாவரங்களை நட்டு, முடிந்தவரை அதை சேவித்தால் அல்லது தானம் செய்தால், நிச்சயமாக அதன் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள்.
6. வியாழன் அன்று விரதம் இருந்து வாழை மரத்திற்கு நீர் ஊற்றினால் திருமணத் தடைகள் நீங்கும். திருமணமானவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அவர்களின் திருமண வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்..
7. வியாழன் அன்று குங்குமம், மஞ்சள் சந்தனம் அல்லது மஞ்சள் தானம் செய்யலாம். அதோடு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். இதன் காரணமாக ஜாதகத்தில் வியாழன் வலுப்பெற்று சுப பலன்களைத் தரத் தொடங்குகிறார்.
8. விஷ்ணுவை வழிபடும் போது, அவருக்கு முன்னால் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பூக்களுடன் துளசியினால் அர்ர்சனை செய்து வழிபடவும். வியாழன் காலை, வீட்டின் பிரதான வாசலில் கோலம் இட்டு சிறிது வெல்லம் வைக்கவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். பசுவிற்கும் உணவளிக்கவும்.
மேலே கூறியுள்ள சில பரிகாரங்களில், ஏதேனும் ஒன்றை தொடந்து செய்து வந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.