)
விநாயக பெருமானின் திரு அவதார தினமான விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி வருகிறது. விநாயகரை நம் இல்லத்திற்கு அழைத்து, பூஜை செய்து, பின் அவரை வழியனுப்பி வைக்கும் இந்த மங்களகரமான நாட்களில், சில விதிமுறைகளை பின்பற்றுவதும் சில தவறுகளை தவிர்ப்பதும் நல்லது. இதன் மூலம் விநாயகரின் அருளை முழுமையாக பெற முடியும். விநாயகர் சதுர்த்தியின் போது செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று இரவு சந்திரனை பார்ப்பது தோஷத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதால், அன்றைய தினம் சந்திரனை நேரடியாக பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். விநாயகர் வழிபாட்டில் துளசி இலைகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. புராணத்தின்படி, துளசி தேவி, கணபதியை திருமணம் செய்ய விரும்பியபோது, அவர் அதை மறுத்து சபித்ததால், அவரது பூஜையில் துளசி இடம்பெறுவதில்லை. பூஜையின் போது, கருப்பு அல்லது நீல நிற ஆடைகளை அணிவதை தவிர்த்து, சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற மங்களகரமான நிறங்களில் ஆடைகளை அணிய வேண்டும். காலணிகளை பூஜை அறையின் அருகே அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும், பூஜைக்கு புதிய விநாயகர் சிலையையே பயன்படுத்த வேண்டும். பழைய சிலையை முறையாக நீரில் கரைத்துவிட வேண்டும். வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது. இரசாயனங்கள் கலந்த சிலைகளை தவிர்த்து, எளிதில் நீரில் கரையும் களிமண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை வாங்குவது சிறந்தது. விநாயகர் சிலையை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. ஒரு மர பலகை அல்லது பீடத்தின் மீது, சிவப்பு அல்லது மஞ்சள் துணி விரித்து, அதன் மீதுதான் சிலையை நிறுவ வேண்டும். மேலும், குளியலறை அல்லது குப்பை கூடும் இடங்களுக்கு அருகில் சிலையை வைக்கக்கூடாது. விநாயகரை வீட்டிற்குள் ஸ்தாபிதம் செய்திருக்கும் நாட்களில், அசைவ உணவுகள், வெங்காயம், பூண்டு கலந்த தாமச குணமுள்ள உணவுகள் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
விநாயகர் சிலையைகடலிலோ, ஆற்றிலோ வீசி எறியக்கூடாது. "கணபதி பாப்பா மோர்யா" என்று கோஷமிட்டவாறு, பக்தி சிரத்தையுடன், மெதுவாக நீரில் மூழ்க செய்து கரைக்க வேண்டும். சிலையை உடைப்பதோ, சேதப்படுத்துவதோ கூடாது. கரைக்க எடுத்துசெல்லும் முன், வீட்டில் இறுதி ஆரத்தி காட்டி, அவருக்கு பிடித்த உணவுகளை படைத்து அவரை வழியனுப்ப வேண்டும். பொது நீர்நிலைகள் இல்லை என்றால், வீட்டிலேயே ஒரு பெரிய வாளியில் அல்லது தொட்டியில் நீரினை நிரப்பி, அதில் சிலையை கரைப்பது மிகவும் சிறந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையாகும்.
சிலையை கரைத்த பிறகு, பூஜை செய்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூக்கள், மாலைகள் போன்ற பூஜை பொருட்களை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த முக்கியமான விதிகளை பின்பற்றி, விநாயகரை மனமுருக வழிபட்டால், அவரது அருள் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் நிறைந்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ