)
Sani Vakra Nivarthi On November 28 : இந்து ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் மற்றும் கர்ம பலன்களை வழங்குபவர் என்று அழக்கப்படுகிறார். ஒன்பது கிரகங்களில் சனி ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது, சனி மீனத்தில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். தற்போது ஜூன் 2027 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் தான் பயணம் செய்வார். இதனிடையே சுமார் 138 நாட்கள் வக்ர நிலையில் நகர்ந்த பிறகு, வருகிற நவம்பர் 28, 2025 அன்று சனி நேரடியாக பயணிக்கத் தொடங்குவார்.
சனியின் வக்ர நிவர்த்தி பயணம் பல ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகளைத் தரும் என்றாலும், தற்போது சனியின் ஏழரை சனி, சனி தசை கீழ் உள்ள ராசிக்காரர்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனியின் வக்ர நிவர்த்தி பயணத்திற்குப் பிறகு எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் தற்போது ஏழரை சனியின் பிடியில் சிக்கி உள்ளது. சனி நேரடியாகச் செல்வதால், இந்த காலம் இந்த ராசி நபர்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். இந்த நேரத்தில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது இழப்புகளுக்கு வழிவகுக்கும். வேலையில் கடின உழைப்பு தேவைப்படும். குடும்பத்திற்குள் சிறிய விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் இருப்பதால் நிதி சிக்கல்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வேலை செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், மேலும் வணிகர்கள் நிதி பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ள முதியவர்களின் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம்.
மீனம்: இந்த காலகட்டம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது. ஏழரை சனியின் முழுமையான தாக்கம் இந்த ராசிக்காரரால் மீது இருக்கக்கூடும். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம், நிதி இழப்புகள் மற்றும் கடன் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலம் குறித்த அலட்சியம் கொள்ளாமல் இருக்கவும். குடும்ப வாழ்க்கையிலும் குழப்பம் நிலவக்கூடும்.
சனி பகவானின் அருள் பெற. ‘நீலாஞ்சன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; சாயா மார்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது தவிர, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகிய ஸ்தோத்திரங்களை கூறுவதும் பலன் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ