ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த மாற்றங்களால் 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படுகின்றன. தீபாவளிக்கு பிறகு, அக்டோபர் 26 ஆம் தேதி தேவ குரு பிரஹஸ்பதி தனது நிலையிலிருந்து மாறினார். தேவகுரு வியாழன் 29 ஜூலை 2022 அன்று மீன ராசியில் தனது நிலையை மாற்றினார். குரு பகவான் வக்ர நிலையில், அதாவது, இயல்பு நிலைக்கு எதிரான நிலையில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார். இப்போது அக்டோபர் 26 மீன ராசியில் அவர் நிலை மாறினார். குரு பகவான் நவம்பர் 24, 2022 வரை இந்த ராசியில் இருப்பார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றாலும், 4 ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த மாற்றம் அபரிமிதமான சுப பலன்களை ஏற்படுத்தும். வியாழனின் தாக்கத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம். 


கும்பம்: 


ஜோதிட சாஸ்திரப்படி, குரு பகவான் கும்ப ராசியின் இரண்டாவது வீட்டிற்குள் நுழைவார். இது கும்ப ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். பணியிடத்திலும் பாராட்டுகள் குவியும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


கடகம்:


குரு பகவான் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கடக ராசிக்காரர்கள் குருவின் பரிவர்த்தனை காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வியாழன் நிலை மாற்றம் கண்டவுடன், இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் முடியும். தொழில் வல்லுநர்கள் பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அயல்நாடு தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெறலாம்.


மேலும் படிக்க | நிலை மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பணியிடத்தில் முன்னேற்றம் 


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களின் பத்தாம் வீட்டில் வியாழன் சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சி மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். அலுவலக வேலைகலில் இருப்பவர்களுக்கு புதிய புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில்முறை நபர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறுவார்கள். இது முதலீடு செய்ய ஏற்ற காலமாக இருக்கும். இப்போது செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். 


வாழைமரத்தை தொழுதால் நல்ல பலன்கள் கிடைக்கும்


மகாபாரதத்தித்தில், தேவகுரு பிருஹஸ்பதி மகரிஷி அங்கீராவின் மகன் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிருஹஸ்பதிக்கு தேவர்களின் குரு என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவர் கழுத்தில் தங்கக் கிரீடங்களையும் கழுத்தில் அழகிய மாலைகளையும் அணிந்திருப்பார். அவர் மஞ்சள் ஆடை அணிந்தும், தாமரை இருக்கையில் அமர்ந்து நான்கு கைகளைக் கொண்டு அருள் புரிகிறார்.  சாஸ்திரங்களின்படி, வியாழன் கிரகம் பிரம்மாவைக் குறிக்கிறது. பொது நம்பிக்கையின்படி, வாழை மரத்தை குருவாக வணங்கினால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நவம்பரில் 5 கிரகங்களின் ராசி மாற்றம், இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ