மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும்

Maha Shivaratri 2025: சிவ பெருமானின் பரிபூரண அருளைப் பெற மகா சிவராத்திரி நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2025, 11:19 PM IST
  • பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி.
  • எந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும்?
  • முழு விவரத்தை இங்கே காணலாம்.
மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும்

Maha Shivratri 2025: இந்து மதத்தில் மகாசிவராத்திரி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது, முக்கியமானது. மகாசிவராத்திரி நாளில், சிவ பெருமான் மற்றும் பார்வதி அன்னைக்கு விரதம் இருப்பது, பூஜை செய்வது, துதிகளை ஓதுவது போன்றவை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகா சிவராத்திரி நாளில் ராசிக்கு ஏற்ப ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தால் பல நன்மைகள் கிட்டும். இதன் மூலம், திருமணத் தடைகள் நீங்கும், நிதி சிக்கல்கள் தீரும், உடல் ஆரோக்கியம் மேம்படும், குழந்தை பாக்கியம் கிட்டும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்று ஐதீகம்.

Add Zee News as a Preferred Source

மகா சிவராத்திரி நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேஷம்: மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி நாளில் சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு நிற இனிப்புகள் மற்றும் சிவப்பு நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவர்கள் மகாசிவராத்திரி நாளில் ஏழைகளுக்கு வெள்ளை மற்றும் சிவப்பு நிறப் பொருட்களை தானம் செய்ய வேண்டும். வெள்ளை மற்றும் சிவப்பு நிற ஆடைகள், வெள்ளை மற்றும் சிவப்பு நிற இனிப்புகள், வெள்ளை முத்து நெக்லஸ், பால் பாயசம் போன்றவற்றை தானம் செய்வதன் மூலம் சிவாசக்தியின் சிறப்பு அருளை பெறலாம்.

மிதுனம்: மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். மிதுன ராசியில் பிறந்தவர்கள், மகாசிவராத்திரி அன்று பச்சை நிற இனிப்புகள், பச்சை நிற ஆடைகள் போன்ற பச்சை நிற பொருட்களை தானம் செய்வதன் மூலம் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். மிதுன ராசிக்காரர்கள் பசுவுக்கு புல்லை உணவாக அளித்தால், அவர்கள் அனைத்து நிதி பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

கடகம்: கடக ராசியின் அதிபதி சந்திரன். மகாசிவராத்திரி நாளில், கடக ராசிக்காரர்கள் வெள்ளை நிற இனிப்புகள், வெள்ளை நிற ஆடைகள், வெள்ளை முத்து நெக்லஸ் போன்ற வெள்ளை நிற பொருட்களை ஏழைகளுக்கு தானம் செய்து சிவனின் சிறப்பு ஆசிகளைப் பெறலாம். கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனுக்கு பால் நெய்வேத்thiயம் செய்து வழிபட்டால், செல்வத்தை ஈட்டுவதில் உள்ள அனைத்து தடைகளையும் சிவபெருமான் நீக்குவார்.

சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சிம்ம ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி நாளில் பசுவுக்கு வெல்லம் அளித்தால், அவர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும். மகாசிவராத்திரி நாளில், சிம்ம ராசிக்காரர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகள், சிவப்பு மற்றும் மஞ்சள் இனிப்புகள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சிவப்பு அல்லது மஞ்சள் பொருட்களை ஏழைகளுக்கு கொடுப்பதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, பெருமை, மரியாதை போன்றவற்றைப் பெறுவார்கள்.

கன்னி: கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். மகாசிவராத்திரி நாளில், கன்னி ராசிக்காரர்கள் பச்சை நிற ஆடைகள், பச்சை நிற இனிப்புகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பச்சை நிறப் பொருட்களை ஏழைகளுக்கு தன்னலமின்றி வழங்கினால், அவர்கள் சிவபெருமானின் சிறப்பு ஆசிகளைப் பெறுவார்கள். மகாசிவராத்திரி அன்று ஒரு பசுவிற்கு போதுமான தீவனம் அளித்தால், சிவ பெருமானின் அருளால் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

துலாம்: துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். மகாசிவராத்திரி நாளில், துலாம் ராசிக்காரர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். ஏழை மக்களுக்கு ஆடைகள், இனிப்புகள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்ற வெள்ளை மற்றும் சிவப்பு நிறப் பொருட்களைக் கொடுப்பதால் சிவசக்தியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். மகாசிவராத்திரி நாளில், விருச்சிக ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு நிற இனிப்புகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிறப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்கினால் சிவபெருமான் மகிழ்ச்சியடைகிறார். இதனால் சிவபெருமானின் ஆசிகள் அவர்களுடன் நிலைத்திருக்கும்.

தனுசு: தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி. பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று, தனுசு ராசிக்காரர்கள் ஏழை மக்களுக்கு ஆடைகள், இனிப்புகள் போன்ற மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்தால், சிவனின் சிறப்பு ஆசிகள் நிலைத்திருக்கும். மேலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு கிடைத்து நல்வாழ்வு மலரும்.

மகரம் மற்றும் கும்பம்: மகரம் மற்றும் கும்ப ராசிகளை ஆளும் கிரகம் சனி. மகாசிவராத்திரி நாளில், மகர மற்றும் கும்ப ராசிக்காரர்கள் ஏழை எளிய மக்களுக்கு நீலம், கருப்பு அல்லது அடர் நிற ஆடைகள், இனிப்புகள், போர்வைகள், திரைச்சீலைகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொடுத்தால் சிவன் மகிழ்ச்சியடைவார். இதனால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

மீனம்: மீன ராசியின் அதிபதி குரு. மகாசிவராத்திரி நாளில், மீன ராசியில் பிறந்தவர்கள் ஏழை மக்களுக்கு மஞ்சள் நிறப் பொருட்கள், மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் இனிப்புகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் மஞ்சள் பொருட்களை தானமாகக் கொடுக்க வேண்டும். இது வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சிவசக்தியின் மகத்தான ஆசிகளைப் பெற உதவும்.

மேலும் படிக்க | மீனத்தில் புதன் - சுக்கிரன்: இந்த 5 ராசிகளுக்கு அன்லிமிடெட் மகிழ்ச்சி காத்திருக்கு!

மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2025: சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், செல்வச்செழிப்புடன் வாழவைப்பார் ஈசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News