)
Navaratri Nine Colors: நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri) பண்டிகை, நேற்று அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுயுள்ளது. அதுமட்டுமின்றி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அதேபோல் கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.
நவராத்திரியின் (Navaratri 2025) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்க்கை தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.
நவராத்திரியின் முதல் நாளில் ஷைலபுத்ரி தேவி வழிபடப்படுகிறாள். துர்க்கை அம்மனின் முதல் வடிவம் இவள். மலை அரசனான இமவான் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.
முதல் நாள் - வெள்ளை
நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை, பிரம்மசாரிணி தேவி. மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.
இரண்டாவது நாள் - சாம்பல்
சந்திரகாண்டா தேவி, பார்வதியின் திருமணமான அவதாரம். நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னை வணங்கப்படுகிறார்.
மூன்றாவது நாள் - சிவப்பு
கூஷ்மாண்டா தேவி, சூரிய மண்டலத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த தேவி, எட்டு கைகளைக் கொண்டவளாதலால், அஷ்டபுஜா தேவி என்றும் அழைக்கப்படுகிறாள். நவராத்திரி விழாவின் 4ஆம் நாளான சதுர்த்தி தினத்தன்று 'கூஷ்மாண்டா' வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம்.
நான்காவது நாள் - ஆரஞ்சு
ஸ்ரீ ஸ்கந்த மாதா, நவராத்திரி விழாவின் 5ம் நாளில் வணங்கப்படுகின்றாள். பார்வதி தேவி, ஸ்கந்தனின் தாயாக மாறியபோது, அவர் ஸ்கந்தமாதா என்று அழைக்கப்பட்டார்.
ஐந்தாவது நாள் - நீலம்
மகிஷாசுரனை அழிக்க, பார்வதி தேவி காத்யாயனி தேவியாக உருவெடுத்தாள். நவராத்திரியின் ஆறாம் நாளில் காத்யாயனியை வழிபடுவது வழக்கம். இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.
ஆறாவது நாள் - மயில் பச்சை
நிசும்பன் அரக்கர்களைக் கொல்ல, பார்வதி தேவி தனது தங்கத் தோலை அகற்றியபோது, அவள் காளராத்திரி தேவி என்று அழைக்கப்பட்டாள். நவராத்திரி திருவிழாவின் ஏழாம் நாளில் 'காளராத்திரி' யை வழிபடுவது வழக்கம்.
ஏழாவது நாள் - மஞ்சள்
மஹாகௌரி தேவி, வெண்ணிற ஆடைகளை மட்டுமே அணிவதால், ஸ்வேதாம்பரதாரா என்றும் அழைக்கப்படுகிறாள். மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும்.
எட்டாவது நாள் - இளஞ்சிவப்பு
சிவபெருமானின் இடது பாதியில் இருந்து சித்திதாத்ரி வடிவத்தில் தோன்றினாள். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம். நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் 'சித்தி தாத்ரி' துர்க்கை வழிபாடு செய்வர்.
ஒன்பதாம் நாள் - பச்சை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ