குரு வக்ரி 2022: ஜோதிட சாஸ்திரப்படி சில கோள்கள் ஒவ்வொரு மாதமும் பின்னோக்கி நகர்கின்றன. அவற்றின் சுப மற்றும் அசுப விளைவுகள் அனைவரது வாழ்க்கையிலும் காணப்படுகின்றன. ஜூலை 29-ம் தேதி வியாழன் கிரகம் மீனத்தில் பின்னோக்கி நகரவுள்ளார். குரு பகவான் ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறார். அதே நேரத்தில், அவர் அறிவு, கல்வி மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். தேவகுரு வியாழனின் வக்ர பெயர்ச்சி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு குருவின் பெயர்ச்சி வாழ்வில் அபரிமிதமான மகிழ்ச்சியை அள்ளித்தரும். ஜூலை 29 ஆம் தேதி வியாழன் மீனத்தில் வக்ரமாகும். குரு பகவானின் வக்ர பெயர்ச்சி கடகம், மகரம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். 


மகரம்:


ஜோதிட சாஸ்திரப்படி மகர ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதே சமயம் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இந்த காலத்தில் பண வருவாய்க்கான பல வழிகள் திறக்கும். இதுமட்டுமின்றி திடீர் பண ஆதாயமும் உண்டாகும்.


மேலும் படிக்க | சமசப்தக யோகத்தினால் ஆகஸ்ட் 17 வரை இந்த ‘4’ ராசிகளுக்கு போதாத காலம் தான்!


கடகம்:


கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில், வியாழன் வக்ரமாவார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். அதே சமயம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் புதிய தொழில் தொடங்க நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.


விருச்சிகம்:


ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றத்துடன் வருமானமும் கூடும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இப்போது முதலீடு செய்வதற்கான நல்ல நேரமாகும். இந்த காலத்தில் முதலீடு செய்த பணத்திற்கு பலன் கிடைக்கும். இப்போது செய்யும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் செய்தவுடன் சுப காலம் தொடங்கும். இந்த காலகட்டத்தில் பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். குரு பிற்போக்கு நிலையில் இருப்பதால் பயண யோகம் உண்டாகும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சாதகமானதாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ