Vastu Tips: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் சில எளிய பரிகாரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய தருணம். தனது வாழ்க்கை துணை வாழ்நாள் முழுவதும் தன்னோடு வர வேண்டும், சுக துக்கங்களில் பங்கு பெற வேண்டும் என்றுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். திருமண உறவில் ஏற்படும் பாதிப்பு உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கிறது. இந்நிலையில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் சில எளிய பரிகாரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.
திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீர உதவும் சில வாஸ்து பரிகாரங்கள்
வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை அறிந்து கொள்வதன் மூலம், தம்பதிகள் தங்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தி, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்
சரியான திசையில் படுக்கையை அமைப்பது அவசியம்
தம்பதிகள் தங்கள் படுக்கையை சரியான திசையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக படுக்கை தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். இது கணவன் மனைவி உறவை வலுவாக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதோடு படுக்கைக்கு மேலே, கூரை பகுதியில் பீம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு படுக்கையறையில் ஜோடி அண்ணன் அல்லது ராதாகிருஷ்ணனின் படத்தை வைப்பது வாஸ்து குறைபாடுகள் நீங்க உதவும். ஜோடி மீன்கள் படத்தை வைப்பதும் நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.
படுக்கை அறையில் கண்ணாடி இருப்பது சரியல்ல
பெரும்பாலானோர் தங்கள் படுக்கை அறையில் கண்ணாடியை வைத்திருப்பார்கள். ஆனால் இதனால் வாஸ்து குறைபாடு ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. அப்படி படுக்கையறையில் கண்ணாடி அல்லது ட்ரெஸ்ஸிங் டேபிள் இருந்தால், அதனை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைக்கலாம். அதோடு, இரவில் அதனை துணியால் மூடுவது நல்லது.
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவும் வாழை மர வழிபாடு
வாழை மரத்தில் மகாவிஷ்ணுவும் அன்னை மகாலட்சுமியும் வசிப்பதாக, வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, கணவன் மனைவி இருவரும் வாழை மரத்தை வழிபடலாம்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கொடுக்கும் சில தானங்கள்
தான தர்மங்கள் எப்போதுமே கர்ம வினைகளை போக்கும் சக்தியை கொண்டவை. அந்த வகையில் மஞ்சள் நிற ஆடைகள், கடலைப்பருப்பு, கடலை மாவு மற்றும் கடலை பருப்பில் செய்த இனிப்புகள், வாழைப்பழங்கள் போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று வாஸ்து கூறுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், வாஸ்து சாஸ்திரங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ