Solar Eclipse 2025 Date and Time: இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் மிகப்பெரிய வானியல் நிகழ்வாகும், ஆனால் இது சிறப்பு மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் நாளை அதாவது செப்டம்பர் 21, 2025 ஞாயிற்றுக்கிழமை நிகழப் போகிறது. இது செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 10:59 மணி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் அமாவாசை 2025 அன்று கன்னி ராசியிலும், உத்தரட்டாதி நட்சத்திரத்திலும் நிகழப் போகிறது. கிரகணத்தின் போது, சூரியன், சந்திரன் மற்றும் புதன் கன்னி ராசியில் பயணிக்கும்.
இந்த கிரகணத்தின் விளைவுகளைத் தடுக்கவும், உங்கள் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தவும் சூரிய கிரகணத்தின் போது எந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்பதை அறிந்துக்கொள்வோம்.
சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
கிரகணத்தை பொறுத்தவரையில், மறைக்கும் என்றும், இருள் என்றும் கூறப்படுகிறது. அதாவது கிரகணம் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது, சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. கோள்கள் சுற்றிவரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, நடுவில் நிலா வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும்.
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்குரிய மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்றாகும். இந்த மந்திரத்தை உச்சரித்தால் சகல செளபாக்கியத்தையும் நாம் பெறலாம்.
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் வரிகள்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||
இந்த கிரகணம் மனதில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
சூரிய கிரகணத்தின் போது உங்கள் மனதை ஆன்மீக தியானத்தில் மூழ்கி இருந்தால், எதிர்மறையான விளைவுகளைத் தடுக்க உதவும். இதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன், கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
காயத்ரி மந்திரம்
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
தன்னம்பிக்கை மற்றும் மரியாதையை அதிகரிக்கும் மந்திரம்
தன்னம்பிக்கை மற்றும் வெற்றியை அடைய எளிதான வழி சூரிய பகவானை வழிபட்டு சூரிய மந்திரங்களை ஜபிப்பதாகும். அதேபோல், சூரிய கிரகணத்தின் போது சூரிய மந்திரங்களை ஜபிப்பது சூரிய தோஷத்தை நீக்கி தன்னம்பிக்கையையும் மரியாதையையும் அதிகரிக்கும்.
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நாளை மறுநாள் சூரிய கிரகணம்: என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









