solar eclipse 2025: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 அன்று நிகழும். இந்த கிரகணத்தின் போது சில செயல்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. அதேசமயம் சில செயல்களை செய்வது புனிதமானதாகக் கருதப்படுவதில்லை.

Surya Grahanam 2025: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி, 2025 அன்று நிகழ்ந்தது. அதே நாளில், அதாவது மார்ச் 29 ஆம் தேதி அன்று, சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதன் காரணமாக, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இருப்பினும், இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை, இப்போது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நாளை மறுநாள் நிகழப் போகிறது.
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 21 ஆம் தேதி, 2025 அன்று நிகழப் போகிறது. இந்த சூரிய கிரகணம் இரவு 11 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 3.24 மணி வரை நீடிக்கும். இரவில் சூரிய கிரகணம் ஏற்படுவதால், இந்தியாவில் தென்படாது.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அமெரிக்கா, சமோவா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் மட்டுமே தென்படும்.
கிரகணத்தை பொறுத்தவரையில், மறைக்கும் என்றும், இருள் என்றும் கூறப்படுகிறது. அதாவது கிரகணம் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது, சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. கோள்கள் சுற்றிவரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, நடுவில் நிலா வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும்.
1. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
2. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
3. வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
3. சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.
4. குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது.
5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ