Zodiac Signs Are Known For Their Honesty : நேர்மை என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் முக்கியமாக தேவைப்படும் ஒரு விஷயமாகும். ஆனால் பல சமயங்களில் நம்மால் அந்த நேர்மையை கடைப்பிடிக்க முடியாமல் போய்விடும். அந்த சமயங்களில் தான் பொய் எட்டிப் பார்க்கும். ஆனால் தங்கள் வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும், நேர்மையே உயிர் மூச்சாக கருதும் சில ராசிக்காரர்கள் இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
தனுசு:
இந்த ராசியை சேர்ந்தவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும், அதில் நேர்மை இருக்க வேண்டும். என எதிர்பார்ப்பார்களாம். உண்மை எதுவாக இருப்பினும் அதனை முகத்திற்கு நேராக கூறிவிடுவார்கள். இவர்களை பிறர் இவர்கள் நேர்மைக்காகவே நினைவில் வைத்துக் கொள்வார்களாம். பிறருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று இல்லாமல் தனக்குத்தான் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கும் ராசிக்காரர்கள் இவர்கள். உண்மைக்கு அதிக மதிப்பு கொடுக்கும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள விஷயங்களை நேராகவே பேசி விடுவார்களாம். அதேபோல தன்னுடன் பழகுபவர்களும் அதேபோன்ற நேர்மையுடன் இருக்க வேண்டுமென கருதுவார்களாம்.
மேஷம்:
தைரியத்துக்கு பெயர் போனவர்கள் மேஷ ராசிக்காரர்கள். எதை எடுத்தாலும் நேர்பட பேசும் இவர்களின் குணம் பெரும்பாலானோருக்கு பிடித்ததாக இருக்குமாம். தான் எந்த அளவிற்கு நேர்மையாக இருக்கிறோமோ, அதே அளவிற்கு தன்னுடன் பழகுபவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்களாம். பிறர் தன்னிடம் பொய் கூறினால் இவர்களுக்கு பச்சையாக தெரிந்துவிடும். எனவே தன்னை ஏமாற்றுபவர்களை இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காதாம். உண்மை பிறரை உணர்ச்சி வசப்படுத்தும் என்றாலும் அதனை கூற இவர்கள் தயங்கவே மாட்டார்கள் என கூறப்படுகிறது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் தன்னை குறித்தும் தன்னிடம் இருக்கும் நேர்மை குறித்தும் உயர்வான எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பார்களாம். வாழ்வில் எது சரி இது தவறு என்று கூடு போட்டு வாழும் இவர்கள் அதனை வாழ்நாள் முழுக்க அப்படியே பாதுகாப்பார்களாம். தன்னை சுற்றி இருக்கும் ஏதாவது ஒரு விஷயம் சரியாக இல்லை என்றால் அதனை உற்று நோக்குவதில் மிகவும் கவனத்துடன் இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள். துல்லியமான உண்மையை அனைவரிடத்திலிருந்தும் எதிர்பார்க்கும் இவர்கள் உண்மை அசோகரியத்தை ஏற்படுத்தினாலும் அதுதான் வேண்டும் என கேட்பார்கள். இவர்களின் எந்த நேர்மை இவர்களை வளர்த்து விடுவதோடு மட்டுமின்றி பிறரையும் வளர்க்கும் என கூறப்படுகிறது.
மகரம்:
சனி கிரகத்தால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள், தனக்கென்று உயர்வான கோட்பாடுகளை வைத்துக்கொள்வார்கள். அதில் முக்கியமான ஒன்று உண்மையை பேசுவது நேர்மையாக நடப்பது. இவர்களை பிறர் மதிக்க இவர்களின் நேர்மையை பெரிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால்தான் பலரும் இவர்களிடம் வந்து உண்மையை கூற தயங்க மாட்டார்கள். ஒரு உண்மையை உண்மையாக உரக்கச் சொல்லும் இவர்களின் குணத்தை பெரும்பாலானோரால் கணிக்க முடியாமல் போகலாம். ஆனால் இவர்களைப் பற்றி மிகத் தெரிந்த புரிந்த ஒருவருக்கு இவர்களின் நேர்மையும் புரியும். இவர்களை பொறுத்தவரை, நேர்மையும் உண்மையும் மட்டுமே தங்களின் வாழ்வை உயர்த்தும் என்ற எண்ணம் இருக்கும். அதே போல, வேலையில் மட்டுமன்றி, தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் இடத்திலும் அதே நேர்மையை இவர்கள் கடைப்பிடிப்பர்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்கள் பண மழை கொட்டும்- முழு ராசிபலன்!
மேலும் படிக்க | நரி போன்ற தந்திர குணம் காெண்ட 4 ராசிகள்! யாரெல்லாம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ