மகாசிவராத்திரி என்பது சிவபெருமானின் அருளை பெறுவதற்கு சக்திவாய்ந்த நாளாகும். இந்த நாளில் சிவனை வழிபடுவது பல மடங்கு நன்மையை தரும்
அந்த வகையில், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுகிழமை மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு மகாசிவராத்திரி வழிபாட்டை நீங்கள் துவங்கலாம். அன்று இரவு முழுவதும கண் விழித்து, சிவ பூஜையில் கலந்து கொள்ளலாம்
பிப்ரவரி 16ஆம் தேதி காலை 6.30 மணி உடன் பூஜையை நீங்கள் நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆனால், பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 6.26 மணிக்கு சுதர்த்தசி திதி நிறைவடைகிறது. அதனால் மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 15ம் தேதி காலை முதல் விரதம் இருக்கலம்
பிப்ரவரி 15ம் தேதி முதல் விரதத்தை கடைபிடித்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவனை வழிபாடு செய்யலாம். பிப்ரவரி 16ஆம் தேதி பூஜை செய்து உணவு சாப்பிடலாம்.
அன்று பகல் முழுவதும் தூங்காமல் மாலை 6 மணிக்கு சிவனை வழிபட்டும், விரதத்தை நிறைவு செய்யலாம்.