ஆசைகளை நிறைவேற்றி ஆனந்த வாழ்வு தரும் வரலட்சுமிக்கு ஆடி வெள்ளியில் வரலட்சுமி விரதம்!

';

வரலட்சுமி விரதம்

அம்மனுக்கு நன்றாக அலங்காரம் செய்வது தான் வரலட்சுமி விரதத்தின் முக்கியமான அம்சமாகும். அழகுபடுத்தி பார்த்துக் கொள்வது அன்னைக்கும் பிடிக்குமாம். அம்மனை நன்கு அலங்கரித்த பிறகே பூஜை செய்ய வேண்டும்

';

ஆடை

அம்மனை பட்டுத்துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தை தவிர்க்கவும். மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் உள்ள பட்டுத்துணியால் அம்மனை அலங்கரித்தால் சிறப்பு.

';

கலசம்

அம்மனை கலசத்தில் வைத்து கலசத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும்

';

அம்மனை அழைத்தல்

வரலட்சுமி பூஜையில் அம்மனை வீட்டுக்கு அழைத்தல் என்பது முக்கியமான சம்பிரதாயமாகும். வீட்டிற்கு வரும் செல்வ மகளை நன்றாக வரவேற்று உபசரித்தால் தானே, வீட்டில் தங்குவார்?

';

பிள்ளையார்

வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்

';

மனம் ஒன்றி வழிபடுவது

வரலட்சுமி பூஜை செய்வதற்கு ஆடம்பரம் தேவையில்லை. பக்தி சிரத்தையுடன் அன்னையை வழிபட்டால் வரம் அனைத்தையும் வரமகாலட்சுமி தந்தருள்வார்

';

நைவேத்தியம்

வடை, சர்க்கரை பொங்கல், பாயசம், அப்பம், கொழுக்கட்டை, சித்திரன்னங்கள் என அன்னைக்கு செய்யும் நைவேத்தியங்களும் விதவிதமாய் இருக்கட்டும்

';

சரடு

வரலட்சுமி பூஜை முடிந்ததும், அம்மனுக்கு சாற்றியிருக்கும் மஞ்சள் சரடை கட்டுக் கொள்ள வேண்டும்

';

VIEW ALL

Read Next Story