ரோஜா பூ

ரோஜா பூவின் மணம் வீடு முழுவதும் பரவி நறுமணம் வீசுவதுபோல நல்ல ஆற்றல் உங்கள் வீடு முழுவதும் பரவி மகிழ்ச்சியோடு வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

';

முட்கள் நிறைந்த செடி

முட்கள் நிறைந்த செடிகளை வீடுகளில் வைத்திருப்பது அபசகுனமாக கருதப்படாலும் ரோஜா செடி இதற்கு விதிவிலக்கு. எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சும் திறன் கொண்டதாக இது கருதப்படுகிறது.

';

பண வரவு

வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு ரோஜா மலரில் கற்பூரத்தை ஏற்றவும். பிறகு, அந்த மலரை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பண வரவு அதிகரிக்கும்.

';

ஆசைகள் நிறைவேற

சுக்ல பக்ஷத்தின் முதல் செவ்வாய்கிழமையன்று, பகவான் ஹனுமனுக்கு 11 புதிய ரோஜா பூக்களை அர்ப்பணிக்கவும். இதை தொடர்ந்து 11 செவ்வாய் கிழமைகள் செய்ய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்

';

பணம் விரயம்

செவ்வாய்கிழமை அன்று சிவப்பு துணியில் சந்தனம், சிவப்பு ரோஜா மற்றும் குங்குமத்தை வைத்து கட்டி அதை வீடு அல்லது கடையில் உள்ள பெட்டகத்தில் வைக்கவும். இதனால், பணம் விரயம் ஆகாமல் இருக்கும்.

';

நோய்கள் தீர

வீட்டில் உள்ள ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், வெற்றிலையில் ரோஜா பூக்கள் நோயாளிக்கு திருஷ்டி சுற்றுவது போல் 11 முறை சுற்றி நாற்சந்தியில் போடவும், திருஷ்டி கழிந்து உடல் நிலை சீராகும்.

';

கடனில் இருந்து விடுபட

ஒரு வெள்ளைத் துணியில் நான்கு மூலைகளிலும் ரோஜாக்களை வைத்து கட்டவும். பின்னர், ஓடும் ஆற்றில் எறிந்து விடுங்கள். இதன் மூலம் கடனில் இருந்து விரைவில் விடுபடலாம்.

';

தென்மேற்கு மூலை

ரோஜா செடிகளை வீட்டின் தென்மேற்கு மூலையில் வளர்க்க வேண்டும். சிவப்பு பூக்கள் கொண்ட தாவரங்களை வைத்திருப்பதற்கு தெற்கு ஒரு இணக்கமான திசையாகும்.

';

சமூக அந்தஸ்து

ரோஜா வீட்டின் உரிமையாளரின் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story