ஐபிஎல் தொடரின் 18வது சீசனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது.
)
2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதன். இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபில் சால்ட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மயங்க் அகர்வால் விராட் கோலியுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது ஆர்சிபி.
அகர்வால் 24, பட்டிதார் 26, கோலி 43, ஜிதேஷ் சர்மா 24, லிவிங்ஸ்டன் 25 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆர்சிபி அணி 190 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷதீப் சிங் மற்றும் ஜேமிசன் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
பஞ்சாப் அணியிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தது. ஜோஸ் இங்கிலிஸ் மட்டும் ரன்களை சேர்த்திருந்தார். அவர் 39 ரன்களை சேர்ந்திருந்தார். மற்ற வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா 24, பிரப் சிம்ரன் சிங் 26, ஸ்ரேயாஸ் ஐயர் 1, நேகல் வதேரா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 18 வருட கோப்பை கனவு ஆர்சிபி அணிக்கு 18 சீசனில் கைக்கூடியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ