ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி மாஸ் காட்டிய பந்துவீச்சாளர்கள்: 2026ல் புதிதாக இணைந்த ஒருவர்! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எப்போதுமே விறுவிறுப்பிற்கும், அதிரடியான பல திருப்புமுனைகளுக்கும் பெயர் பெற்றது. பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களை மகிழ்விப்பது ஒருபுறம் என்றால், பந்துவீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை தெறிக்கவிடுவது மறுபுறம். இதில் பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம் மற்றும் வாழ்நாள் கனவு என்னவென்றால், ஐபிஎல் தொடரில் தாங்கள் வீசும் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்துவது தான். பல பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தாலும் விக்கெட் எடுப்பது தனி ரெகார்ட் தான்.
இது பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தாலும், ஐபிஎல் வரலாற்றில் சில பந்துவீச்சாளர்கள் இந்த சாதனையை மிக எளிதாக செய்துள்ளனர். குறிப்பாக நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் இரண்டு அறிமுக பந்துவீச்சாளர்கள் தங்களது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இந்த மாபெரும் சாதனையை செய்த வீரர்களின் முழுமையான பட்டியலையும், ஆட்டத்தின் முதல் பந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களை பற்றியு தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
The first Wicket feeling! CSKvDC #WhistlePodu pic.twitter.com/g1fCfS7gUp
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2026
இந்த 2026 ஐபிஎல் சீசன் இளம் வீரர்களுக்கு ஒரு மாபெரும் மேடையாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக இரண்டு பந்துவீச்சாளர்கள் தங்களது முதல் ஐபிஎல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
குர்ஜப்னீத் சிங் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், சிஎஸ்கே அணியின் இளம் பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். அவர் வீசிய முதல் பந்திலேயே டெல்லி அணியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். சர்பராஸ் கான் பிடித்த ஒரு பிரம்மாண்டமான கேட்ச் மூலம் குர்ஜப்னீத் சிங்குக்கு இந்த சாதனை விக்கெட் கிடைத்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்காற்றினார்.
அஷ்வனி குமார் (மும்பை இந்தியன்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு அறிமுகமான அஷ்வனி குமார், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் பந்தை வீசினார். அந்த முதல் பந்திலேயே கொல்கத்தா அணியின் கேப்டனான அஜிங்க்யா ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இந்த சாதனையை ஐபிஎல் வரலாற்றில் முதன்முதலில் செய்த பெருமை இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவையே சாரும். 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இஷாந்த் சர்மா களமிறங்கினார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில், தான் வீசிய முதல் பந்திலேயே கிரிக்கெட் ஜாம்பவானான ராகுல் டிராவிட்டின் விக்கெட்டை வீழ்த்தி சரித்திர சாதனை படைத்தார்.
ஒரு பந்துவீச்சாளர் தனது கரியரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்துவது ஒரு வகை சாதனை என்றால், ஒரு போட்டியின் அல்லது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி எதிரணிக்கு அதிர்ச்சி அளிப்பது மற்றொரு வகை சாதனை. இந்த சாதனையில் இந்திய அணியின் வேகப்புயல் முகமது ஷமி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
முகமது ஷமி (5 விக்கெட்டுகள்)
ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் அல்லது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை முகமது ஷமி தன்வசம் வைத்துள்ளார். அவர் இதுவரை 5 முறை இந்த சாதனையை செய்துள்ளார். கே.எல். ராகுல், ஜாக் காலிஸ், பில் சால்ட், மற்றும் ஷேக் ரஷீத் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே வீழ்த்தியுள்ளார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் & ட்ரெண்ட் போல்ட்
முகமது ஷமிக்கு அடுத்தபடியாக, ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் (3 முறை) மற்றும் பவர்பிளே ஓவர்களின் கிங் என்று அழைக்கப்படும் ட்ரெண்ட் போல்ட் (3 முறை) ஆகியோர் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளனர். அதேபோல லசித் மலிங்கா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் அசோக் திண்டா ஆகியோரும் தலா 3 முறை இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட் எடுத்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை முதல் ஓவர், அதிலும் குறிப்பாக முதல் பந்து என்பது பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் இருவருக்குமே பெரும் அழுத்தத்தை கொடுக்கக்கூடியது. அந்த முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்துவது என்பது ஒரு பந்துவீச்சாளரின் அசாத்தியமான திறமையையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. 2008ல் இஷாந்த் சர்மா தொடங்கி வைத்த இந்த மாபெரும் சாதனை பயணம், 2026ல் குர்ஜப்னீத் சிங் வரை வெற்றிகரமாக தொடர்கிறது. இனி வரும் காலங்களிலும் பல இளம் பந்துவீச்சாளர்கள் இந்த சாதனையை முறியடிப்பார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ