)
இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கேப்டன் கூல் என்று அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. இந்திய அணிக்கு அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர். களத்தில் ஒரு வீரராகவும், தலைவராகவும் எண்ணற்ற சாதனைகளை படைத்த தோனி, களத்திற்கு வெளியே ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். 2025-ம் ஆண்டு நிலவரப்படி, அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1,000 கோடியை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தோனியின் விளையாட்டுத் திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய ராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவ பதவியை வழங்கியுள்ளது. மேலும் பத்ம பூஷன், பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா எனப் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பிசிசிஐ அவருக்கு மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. கிரிக்கெட் உலகில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்த தோனி, தனது கடின உழைப்பாலும், சரியான திட்டமிடலாலும், நிதித்துறையிலும் ஒரு வெற்றிகரமான ராஜாவாக திகழ்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ