CSK vs DC: சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. சனிக்கிழமை மதியம் இந்த போட்டி நடைபெறுகிறது.

ஐபிஎல் 2025 சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குவாத்தில் நடைபெற்ற போட்டியிலும் தோல்வியை சந்தித்தனர். இதற்கு சென்னை அணியின் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், பினிசர் என யாருமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

கேப்டன் ருதுராஜ் கைகுவாட் மூன்றாவது இடத்தில் களமிறங்குவதால் ஓப்பனிங் வீரர்களாக ரச்சின் ரவீந்தரா மற்றும் ராகுல் திருப்பாதி களமிறங்கினர். ஆனால் இந்த தொடக்க ஜோடி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. பவர் பிளே முடிவதற்குள் முடிவதற்குள் சிஎஸ்கே அணி 2, 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. அதே போல மிடில் ஓவர்களில் ரன்கள் அடிக்க சிறந்த ஹிட்டர்கள் இல்லை. மேலும் பவுலிங்கில் நூர் அகமது மற்றும் கலில் அகமது உடன் இணைந்து பந்து வீச நல்ல பவுளர்களும் இல்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
ஓபனிங்கில் ருதுராஜ் மற்றும் டேவான் கான்வே களமிறங்க வேண்டும் என்றும், மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்திரா களமிறங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இளம் வீரர் சாயிக் ரசித் மற்றும் வன்ஷ் பேடி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வீரர்களும் சமீபத்திய உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி உள்ளனர். தேவையான நேரத்தில் அணிக்காக உதவும் திறமை கொண்டுள்ளதால் இவர்கள் மீது சிஎஸ்கே நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல ஆல் ரவுண்டர் அன்சுல் காம்போஜை பிளேயிங் 11ல் கொண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் டேவான் கான்வே உள்ளே வரவேண்டும் என்றால், மிடில் ஆர்டரில் விளையாடும் சாம் கர்ரன் அல்லது ஓவர்டன் வெளியேற வேண்டும். அந்த இடத்தில் அன்சுல் கம்போஜ் போன்ற ஒரு இந்திய வீரரை கண்டிப்பாக விளையாட வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கடந்த போட்டியில் விளையாடிய விஜய் சங்கருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ப்ளே ஆஃப்க்கு செல்ல அடுத்த வரும் சில போட்டிகளில் கட்டாயம் வெற்றி தேவை என்பதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வித்தியாசமான ஒரு சென்னை அணியை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ