CSK vs RCB: இந்த 2 வீரர்கள் நீக்கம்! சென்னை அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்!

CSK vs RCB: ஐபிஎல்லில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2025, 12:34 PM IST
  • இன்று நடைபெறும் சென்னை - பெங்களூரு போட்டி.
  • சென்னையில் போட்டி நடைபெற உள்ளது.
  • அதிக எதிர்பார்ப்பில் இந்த போட்டி உள்ளது.
CSK vs RCB: இந்த 2 வீரர்கள் நீக்கம்! சென்னை அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்!

IPL 2025 CSK vs RCB Playing 11: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது. விராட் கோலி மற்றும் பில் சால்ட் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர், பவுலிங்கில் க்ருனால் பாண்டியா மற்றும் ஹேசல்வுட் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவினர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | சிஎஸ்கேவை திணறடிக்க... ஆர்சிபியின் அந்த 3வது ஸ்பின்னர் யார்? DK சொன்ன ரகசியம்!

மறுபுறம் சென்னை அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. ஜடேஜா, அஸ்வின் மற்றும் நூர் அகமதின் சுழலில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வீழ்த்தினர். இதனால் ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் கூடுதல் ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணிக்கு முதல் போட்டியில் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறைவான டார்கெட்டை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர். ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோர் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இதனால் சாம் கரணுக்கு பதிலாக டேவான் கான்வே அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல கூடுதல் ஆல்ரவுண்டராக அன்சுல் கம்போஜ் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தீபக் ஹூடாவிற்கு பதில் விஜய் ஷங்கர் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி சென்னையை வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு சென்று விடலாம் என்று இருந்த நிலையில், சென்னையை வீழ்த்தி ஆர்சிபி பிளே ஆப்க்கு சென்றது. இதனால் இன்றைய போட்டியில் சென்னை அணி இதற்கு பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளது.

சிஎஸ்கே கணிக்கப்பட்ட ப்ளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேவான் கான்வே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது, விஜய் ஷங்கர்

ஆர்சிபி கணிக்கப்பட்ட ப்ளேயிங் லெவன்: விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம்/ஸ்வப்னில் சிங், சுயாஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

மேலும் படிக்க | CSK vs RCB: பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் சிஎஸ்கே, ஆர்சிபி... யார் யாருக்கு வாய்ப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News