ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல் : போட்டிக்குப் பிறகு நடந்தது இதுதான்..!

Hardik Pandya, Sai Kishore : ஐபிஎல் போட்டியின்போது ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் சாய் கிஷோர் முறைத்து வம்பிழுத்தார். ஆனால் போட்டிக்குப் பிறகு வேற மாதிரி சீன் அரங்கேறியது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 30, 2025, 12:21 PM IST
  • மும்பை அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்
  • ஹர்திக் பாண்டியா - சாய் கிஷோர் இடையே மோதல்
  • போட்டிக்குப் பிறகு நடந்த சுவாரஸ்ய சம்பவம் இதுதான்
ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல் : போட்டிக்குப் பிறகு நடந்தது இதுதான்..!

Hardik Pandya, Sai Kishore : ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியின்போது ஹர்திக் பாண்டியா - சாய் கிஷோர் இடையே மோதல் ஏற்பட்டது. பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த பாண்டியாவை வேண்டுமென்றே சாய் கிஷோர் தான் வம்புக்கு இழுத்தார். ஆனால் போட்டிக்குப் பிறகு இருவரும் வேறுமாதிரி சீன் போட்டனர்.

Add Zee News as a Preferred Source

மும்பை vs குஜராத் மோதல்

ஐபிஎல் 2025 தொடரின் 9வது போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 196 ரன்கள் குவிக்க, அடுத்து சேஸிங் ஆடிய மும்பை அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. குஜராத் அணியில் சாய் சுதர்சன், பட்லர், சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாட, பந்துவீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்துவீசினர். ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 80வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல்

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினாலும் மற்ற பிளேயர்கள் யாரும் பெரிதாக அதிரடி பேட்டிங் ஆடவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்பார்த்தபடி பேட்டில் பந்து படவே இல்லை. இதனை தெரிந்து கொண்ட குஜராத் அணியின் சாய் கிஷோர் 15வது ஓவரை வீசிக் கொண்டிருக்கும்போது ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே முறைத்து வம்புக்கு இழுத்தார். பாண்டியா தலை குணிந்து அமைதியாக இருந்தாலும் சாய் கிஷோர் மீண்டும் முறைத்துக் கொண்டே இருந்தார். இப்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

போட்டிக்குப் பிறகு நடந்தது என்ன?

ஆனால் போட்டிக்குப் பிறகு இருவரும் சகஜமாக கட்டித் தழுவி சிரித்துக் கொண்டனர். இது குறித்து பேட்டியளித்த சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அதனால் இதனையெல்லாம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டோம். களத்தில் எதிரெதிர் துருவங்களாகவே இருப்போம் என கூலாக கூறினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பாண்டியா இருந்தபோதுதான் சாய் கிஷோருக்கு அந்த அணியில் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?

மேலும் படிங்க: இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News