)
India vs Australia 3rd T20I: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20ஐ போட்டி நாளை (நவ. 2) ஹோபார்ட் நகரின் பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை மதியம் 1.45 மணிக்கு நடைபெறும்.
ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கின்றன. இந்த மூன்றையும் வென்றால் மட்டுமே இந்தியாவால் தொடரை கைப்பற்ற முடியும். குறைந்தபட்சம் 2 போட்டிகளை வென்றால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வகையில், நாளைய போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். இந்திய அணி சரியான காம்பினேஷனை இந்த போட்டியில் அமைத்தாக வேண்டும். கடந்த போட்டியை பொருத்தவரை இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியது அனைவரும் அறிந்ததே. அதேநேரத்தில், சூழலுக்கு தகுந்தாற்போல் பந்துவீசுவதிலும் இந்திய அணி சொதப்பியிருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய அணி கடந்த போட்டியில் பவர்பிளேவில் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக பேட்டிங் ஆர்டரில் மாற்றங்களை செய்ததை கூறலாம். அதேபோல், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைத்தது, அர்ஷ்தீப் சிங்கை எடுக்காமல்விட்டது என இந்திய அணி பல தவறுகளை நேற்று செய்திருந்தது. அந்த வகையில், இவற்றை திருத்தி மூன்றாவது டி20ஐ போட்டியில் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை இந்திய அணி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், குல்தீப் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹர்ஷித் ராணா உங்களுக்கு பேட்டராகவும் கைக்கொடுக்கிறார் எனும்பட்சத்தில் சிவம் தூபேவுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் எடுத்து வரலாம். இதன்மூலம், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற ஆப்ஷனும் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்திய அணியில் தற்போது பினிஷிங் ரோலில் அதிரடி காட்ட யாரும் இல்லை. எனவே, சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜித்தேஷ் சர்மாவுக்கும் வாய்ப்பு வழங்கலாம்.
ஆனால், இதில் எந்த மாற்றத்தை செய்யாவிட்டாலும், குல்தீப் யாதவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும். அர்ஷ்தீப் சிங் புதிய பந்திலும், டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். பும்ரா மற்றும் அர்ஷ்தீப் பவர்பிளேவில் முறையே 3 மற்றும் 2 ஓவர்களை வீசலாம். மிடில் ஓவர்களில் ஹர்ஷித் ராணாவை சுழற்பந்துவீச்சாளர்களோடு வீச செய்யலாம். டெத் ஓவர்களில் ராணா, பும்ரா, அர்ஷ்தீப் என சிறப்பாகவும் பந்துவீசலாம். சுழற்பந்துவீச்சு தேவைப்பட்டால் வாஷிங்டன், வேகப்பந்துவீச்சு தேவைப்பட்டால் தூபே ஆகியோரை தேர்வு செய்யலாம்.
IND vs AUS 3rd T20I: இந்திய பிளேயிங் லெவன் (கணிப்பு)
அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் / ஜித்தேஷ் சர்மா, அக்சர் பட்டேல், ஷிவம் தூபே / வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ