இந்தியா - நியூசிலாந்து விளையாடப்போகும் பிட்ச் அதுதான்.... அப்போ வெற்றி கன்பார்ம்

ICC Champions Trophy Final Pitch Report : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் விளையாடப்போகும் பிட்ச் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 8, 2025, 02:05 PM IST
  • இந்தியா - நியூசிலாந்து இறுதிப்போட்டி
  • துபாய் மைதானத்தில் நாளை நடக்கிறது
  • இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்
இந்தியா - நியூசிலாந்து விளையாடப்போகும் பிட்ச் அதுதான்.... அப்போ வெற்றி கன்பார்ம்

India vs New Zealand Pitch Report : ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி, மற்றொரு பலம் வாய்ந்த அணியான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்போட்டி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. நாளை துபாய் மைதானத்தில் நடக்க இருக்கும் இறுதிப் போட்டிக்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடியபோது பயன்படுத்தப்பட்ட பிட்ச் உபயோகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த பிட்சில் தான் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்திருந்தது.

Add Zee News as a Preferred Source

அதனால், அந்த பிட்சில் இந்திய அணி நம்பிக்கையுடன் களமாடும். ஏற்கனவே இந்த பிட்சில் விளையாடி இருக்கிற அனுபவம் இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு இந்தப் போட்டி பெரும் சவாலாக இருக்கப்போகிறது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை நம்பி மட்டுமே பிளேயிங் லெவனை எடுத்திருந்தது. இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தார். இவர்கள் இருவரும் தான் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி அமைத்து சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் தூண்களாக இருக்கின்றனர். 

ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான பிட்ச் பயன்படுத்தப்பட்டால் இந்த இருவர் கூட்டணியே இந்திய அணியின் பிரதான வேகப்பந்துவீச்சு கூட்டணியாக இருக்கும். பிளேயிங் லெவனிலும் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய இந்திய அணியே எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கும். அதாவது இரண்டு வேகபந்துவீச்சாளர்கள் இடம் உறுதியான நிலையில், சுழற்பந்துவீச்சுக்கு நான்குபேர் அணியில் இருக்கப்போகின்றனர். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கூட்டணி சுழல் வரிசையில் வலு சேர்க்கும்.

இதனால் இந்த போட்டியிலும் இந்திய அணி பவுலிங்கில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டாப் பார்மில் இருக்கின்றனர். சுப்மன் கில், கேஎல் ராகுல் ஆகியோரும் நம்பிக்கை கொடுக்கும் நிலையில், நாளைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்பினால் இந்திய அணியை பேட்டிங்கிலும் சமாளிப்பது கடினமாகிவிடும். எது எப்படியோ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் பிட்ச் தொடர்பான குட் நியூஸ் கிடைத்திருப்பது ஒரு நல்ல சகுணமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ரோகித்தை கேப்டன் பதவில் இருந்து தூக்க திட்டமா.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?

மேலும் படிக்க | நியூஸிலாந்து அணியில் முக்கிய வீரர் காயம்! பைனலில் விளையாடுவது சந்தேகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News