Royal Challengers Bangalore: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி செய்த மூன்று தவறுகளே அவர்களின் தோல்விக்கு காரணமாகும்.

Royal Challengers Bangalore Latest News Updates: சின்னசாமி மைதானத்தை தங்களின் கோட்டையாக வைத்திருந்தது ஆர்சிபி. அங்கு விளையாடிய கடந்த 5 போட்டிகளில் ஆர்சிபி அணியே வெற்றிப் பெற்றிருந்தது.
நடப்பு தொடரிலும் மூன்று போட்டிகளில் ஆர்சிபி சின்னசாமி மைதானத்தில் வெற்றிபெற்றது. ஆனால், இப்போது ஆர்சிபி சின்னசாமி மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது.
ஐபிஎல் 2026 சீசன் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் திட்டமிடப்பட்டன. பகலில் நடந்த 26வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் டெல்லி கேப் பிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மட்டுமே அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டினார். விராட் கோலி 19 ரன்கள் எடுத்து பவர்பிளேவிலேயே ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்களில் ஆர்சிபி 1 விக்கெட்டை இழந்து 59 ரன்களை அடித்திருந்தது.
தேவ்தத் படிக்கல் 18, ரஜத் பட்டிதார் 8, டிம் டேவிட் 26, ஷெப்பர்ட் 1, குர்னால் பாண்டியா 12, ஜித்தேஷ் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 175 ரன்களையே ஆர்சிபி அடித்தது. லுங்கி இங்கிடி, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் என தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
176 ரன்கள் என்ற ஓரளவு எளிய இலக்கை டெல்லி அணி துரத்திய நிலையில், பவர்பிளேவிலேயே 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த 3 விக்கெட்டையும் புவனேஷ்வர் குமாரே எடுத்தார். பதும் நிசங்கா 1, கருண் நாயர் 5, சமீர் ரிஸ்வி 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் கேஎல் ராகுல் - ஸ்டப்ஸ் இணைந்து நிதானம் காட்டினர்.
ராகுல் அரைசதம் கடந்த 34 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 57 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து உள்ளே வந்த அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் உடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு, தேவையான ரன்ரேட்டையும் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அக்சர் பட்டேல் காயம் காரணமாக பெவிலியின் திரும்ப டேவிட் மில்லர் களமிறங்கினார்.
கடைசி ஓவருக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஷெப்பர்ட் வீசினார். முதலிரண்டு பந்துகளில் 2 ரன்களே அடிக்கப்பட்டது. 3வது பந்தில் டேவிட் மில்லர் களம் கண்டார். அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு, ஸ்கோரை சமன்செய்தார். 5வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிசெய்தார். ஸ்டப்ஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 60 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
David M
— IndianPremierLeague (@IPL) April 18, 2026
What a moment for him and what a victory for @DelhiC
https://t.co/vfJ6SccA9T#TATAIPL | #KhelBindaas | #RCBvDC pic.twitter.com/iaaHSqD9Ct
பெங்களூரு - டெல்லி போட்டிகளுக்கு பிறகான, ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே 2வது, 3வது இடத்திலும் உள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் அதே 6 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் காரணமாக 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ, சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 6வது, 7வது, 8வது இடத்தில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், கேகேஆர் அணி 1 புள்ளியுடன் 10வது இடத்திலும் உள்ளன.
தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், நிதானமான பேட்டிங் மூலம் போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்று டெல்லி அணி அதன் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆர்சிபிக்கு இது 2வது தோல்வி, சின்னசாமியில் முதல் தோல்வி. ஆர்சிபி தோல்விக்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள் உள்ளன. அவை:
1. ஜேக்கப் டஃபியை கழட்டிவிட்டது: ரொமாரியோ ஷெப்பர்ட் வேண்டும் என்பதற்காக ஹேசில்வுட் வந்த உடன் ஜேக்கப் டஃபியை கழட்டிவிட்டது தவறானது. புவனேஷ்வர் குமார் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீச, ரஷிக் தர் மற்றும் ஹேசில்வுட் பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. இதனால், ரொமாரியோ ஷெப்பர்டுக்கு பதில் டஃபியை வைத்திருந்தால் நிச்சயம் ஆர்சிபி வென்றிருக்கும். ஹேசில்வுட், ரஷிக் டெத் ஓவர்களில் இன்னும் கைக்கொடுத்திருப்பார்கள்.
2. பேட்டிங்கில் செய்த தவறு: ஆர்சிபி 10.4 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 105 ரன்களை அடித்திருந்தது. அதாவது, மீதம் இருந்த 62 பந்துகளில் 70 ரன்களை மட்டுமே ஆர்சிபி அடித்தது. விக்கெட் சரிந்த நேரத்தில் குர்னால் பாண்டியாவை மேலே விளையாட வைத்திருக்கலாம், இன்று அக்சர் பட்டேல் செய்ததை அவர் செய்திருப்பார். ஆனால் அவரை 8வது இடத்தில் களமிறக்குவதில் பயனில்லை. இதனாலேயே கடைசி 4 ஓவர்களில் 27 ரன்களை ஆர்சிபி அடித்தது.
3. பந்துவீச்சு ரொட்டேஷன்: இடதுகை வீரர் அக்சர் பட்டேல் இருந்த காரணத்தாலும், டேவிட் மில்லர் அடுத்த வர இருந்த காரணத்தாலும் சுயாஷ் சர்மாவுக்கு 1 ஓவரை ஆர்சிபி வழங்கவில்லை. ஹேசில்வுட்டுக்கு மிடில் ஓவரில் கொடுத்த அந்த ஓவரை சுயாஷ் சர்மாவுக்கு கொடுத்திருந்தால், கடைசி கட்டத்தில் ஹேசில்வுட் சிறப்பாக பந்துவீசியிருப்பார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!