ஐபிஎல் 2021 இறுதிப் போட்டி, சிஎஸ்கே vs கேகேஆர்: நடப்பாண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) இடையே நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் போட்டியில் கொல்கத்தா அணி தாஸ் வென்றுள்ளது. சென்னையின் அணி 9 வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. அதே வேளையில் கேகேஆர் மூன்றாவது முறையாக பட்டத்தை வெல்லும் கனவோடு களம் இறங்கியுள்ளது. சிஎஸ்கே இதுவரை மூன்று கோப்பைகளை வென்றுள்ளது. அதே நேரத்தில், கொல்கத்தா இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியும், 2014 முதல் கே.கே.ஆர் அணியும் ஐபிஎல் கோப்பையையும் வெல்லவில்லை. இப்போது தோனி அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா அல்லது கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.