)
Bihar Jharkhand Income Tax Details: 2025-2026ஆம் ஆண்டுக்கான ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில், வருமான வரித்துறையின் மொத்த வசூல் ரூ.20 ஆயிரம் கோடி என மூத்த வருமான வரித்துறை ஒருவர் நேற்று (மே 7) தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மற்றும் பீகார் வருமான வரித்துறை வசூல் குறித்து குறித்து வருமான வரித்துறையினர் முதன்மைத் தலைமை ஆணையர் (பீகார் - ஜார்க்கண்ட்) டி. சுதாகர ராவ், செய்தியாளர்களை சந்தித்தபோது, "2025-26 நிதியாண்டில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை சுமார் ரூ.20 ஆயிரம் கோடியாகும். இதில் ரூ.12 ஆயிரம் கோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து மட்டுமே வசூலிக்கப்பட்டது" என்றார்.
மொத்த வசூலில் சுமார் 70% சதவீதம் TDS (வரி பிடித்தம்) மூலம் பெறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் என இரு மாநிலங்களையும் சேர்த்து அதிக வரி செலுத்திய தனிநபர் என்பவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஆவார். ஆனால் தோனி எவ்வளவு தொகையை வரியாக செலுத்தி உள்ளார் என்பதை வருமான வரித்துறை வெளிப்படுத்தவில்லை.
சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (CCL), பாரத் கோகிங் கோல் லிமிடெட் (BCCL) மற்றும் CMPDI ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களே அதிக வரி செலுத்தி உள்ளன. அதேநேரத்தில், கடந்த நிதி ஆண்டில், கனமழை காரணமாக சுரங்கம் சார்ந்த பணிகளில் க டும் தொய்வு ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் (2026-27) ரூ.20,000 கோடி வரி வசூலை தாணடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
மொத்தம் பீகார் மற்றும் ஜார்க்கண்டில் 5.5 கோடி பேர் பான் அட்டையை வைத்துள்ளனர் என்றும் அதில் 40 லட்சம் பேர் வருமான வரியை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். நடப்பு தொடரில் அவர் ஒரு போட்டியில் கூட காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு கெண்டைக்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அவர் ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளை தவறவிட்டதே இல்லை. சிஎஸ்கே அணியும் அவர் இல்லாமல் இத்தனை போட்டிகளை விளையாடவும் இல்லை.
சிஎஸ்கே அணி பிளே ஆப் போகுமா இல்லையா என்பது தெரியவில்லை. அப்படியிருக்க, மீதம் இருக்கும் 4 லீக் போட்டிகளில் சென்னையில் நடைபெற இருக்கும் 2 லீக் ஆட்டங்களில் அவர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 10ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - லக்னோ அணிகளும், மே 18ஆம் தேதி சென்னையில் சிஎஸ்கே - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகளில் தோனி விளையாட வாய்ப்புள்ளது.
நேற்று (மே 8) நடந்து முடிந்த லக்னோ - ஆர்சிபி போட்டிக்கு பின்னர், புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் முறையே 3வது, 4வது, 5வது இடத்தில் உள்ளன.
மேலே குறிப்பிடப்பட்ட டாப் 5 அணிகளுக்கே தற்போது பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சிஎஸ்கே அணி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. கேகேஆர் அணி 7 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், மும்பை மற்றும் லக்னோ அணிகள் 6 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் முறையே 9வது மற்றும் 10வது இடத்திலும் உள்ளன.