பஞ்சாப் போட்டியில் தோனி விளையாட மாட்டார்... வந்தது Exclusive தகவல்!

MS Dhoni: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனி விளையாட மாட்டார் என்ற தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 7, 2025, 08:54 PM IST
  • தோனியை கடந்த சில போட்டிகளாக ஏமாற்றம் அளித்து வருகிறார்.
  • தோனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
  • தோனி ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை
பஞ்சாப் போட்டியில் தோனி விளையாட மாட்டார்... வந்தது Exclusive தகவல்!

IPL 2025, CSK MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கவில்லை எனலாம். அதாவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது, சிஎஸ்கே.

Add Zee News as a Preferred Source

CSK MS Dhoni: பலவீனமாக இருக்கும் சிஎஸ்கே அணி

இதனால், 9வது இடத்தில் தற்போது தத்தளித்து வருகிறது. மிடில் ஆர்டர் பார்க்கவே பலவீனமாக இருந்தாலும், பலமாக காணப்பட்ட டாப் ஆர்டரும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. சிஎஸ்கே பேட்டிங்கை பொறுத்தவரை ரச்சின், கான்வே, ருதுராஜ், தூபே மீதுதான் மொத்த நம்பிக்கையும் உள்ளது. 

விஜய் சங்கர் இன்னும் பெரிதாக செட் ஆகவில்லை. ஜடேஜா - அஸ்வின் ஆகியோர் ஆல்-ரவுண்டர்கள் என்றாலும் அவர்கள் டி20 அரங்கில் பேட்டிங்கில் பெரியளவில் ரன்கள் குவித்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. இவர்கள் பந்துவீச்சுக்காகவே அணியில் இருப்பவர்கள். பேட்டிங் இந்தளவிற்கு ஊசலாடிக்கொண்டிருக்கையில் நம்பர் 7 வீரராக களமிறங்கும் தோனியும் பெரியளவில் கைக்கொடுக்காதது மேலும் பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | சிஎஸ்கேவின் சோலியை முடிக்க... பஞ்சாப் களமிறக்கும் முக்கிய வீரர் - பிளேயிங் XI மாற்றம்!

CSK MS Dhoni: தோனி மீது எக்கச்சக்க விமர்சனங்கள்

இதனால் பலரும் தோனி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் அவருக்கு பதில் இளம் வீரர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அணி களமிறக்க வேண்டும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். தோனி விக்கெட் கீப்பிங்கில் மாஸ்டராக வலம் வந்துகொண்டிருந்தாலும் பேட்டிங்கில் சொதப்புவதால் அவருக்கு பதில் வேறொருவரை அந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

CSK MS Dhoni: தோனி நாளைய போட்டியில் விளையாட மாட்டார்

அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான லட்சுமி நாராயணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,"தோனியே அடுத்த போட்டியில் (பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி) விளையாடுவாரா என்பது தெரியவில்லை. சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அரசல்புரசலாக வந்த தகவலின்படி, தோனி ஒரு சிறிய இடைவேளையை எடுக்க நினைக்கிறார். ஒருமுறை போட்டியை வெளியே அமர்ந்து பார்க்க வேண்டும் என தோனி விருப்பப்படுகிறார்.

CSK MS Dhoni: சிஎஸ்கேவில் வேறு யாருக்கு வாய்ப்பு?

எனவே, டெவான் கான்வே விக்கெட் கீப்பராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எக்கச்சக்க மாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறது" என்றார். 
ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, அன்ஷூல் கம்போஜ் போன்ற இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி வாய்ப்பளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | Exclusive: சிஎஸ்கே தோல்விக்கு பிசிசிஐ போட்ட இந்த கண்டிஷன் தான் காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News