)
Sanju Samson ; ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், வரவிருக்கும் ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அந்த அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சாம்சன் இந்த முடிவை ஐபிஎல் 2025 சீசன் முடிந்த உடனேயே ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக அணி நிர்வாகம், குறிப்பாக அதன் தலைமை உரிமையாளர் மனோஜ் படேல் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்னும் ஒரு உறுதியான முடிவை எடுக்கவில்லை.
சாம்சனை சமாதானப்படுத்தி அணியில் தக்கவைக்க முயற்சிப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், படேல் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் சாம்சனை விடுவிக்க முடிவு செய்தால், அவரை ஏலத்திற்கு அனுப்பலாம் அல்லது வேறொரு அணிக்கு வர்த்தகம் செய்யலாம். ஐபிஎல் விதிகளின்படி, இது போன்ற விஷயங்களில் இறுதி முடிவு franchise-ன் கையில் தான் உள்ளது.
சஞ்சு சாம்சனின் பயணம்:
30 வயதாகும் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நீண்டகால தொடர்பு கொண்டவர். அவர் முதன்முதலில் 2013 முதல் 2015 வரை மூன்று சீசன்களுக்கு அணியில் இருந்தார். பின்னர், இரண்டு ஆண்டுகள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிவிட்டு, 2018-ல் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பினார். 2021-ல் சாம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப் போட்டியை எட்டியது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த ஆண்டு தான் ஆர்ஆர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டி வரை சென்றது.
கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக, சாம்சன் ரூ. 18 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தக்கவைக்கப்பட்ட ஆறு வீரர்களில் ஒருவர். அவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், சந்தீப் ஷர்மா மற்றும் ஷிம்ரான் ஹெட்மயர் ஆகியோரும் தக்கவைக்கப்பட்டனர். ஐபிஎல் 2025 சீசனில், சாம்சன் காயம் காரணமாக 14 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இந்த சீசனில் அணி ஒன்பது இடத்தைப் பிடித்தது.
தற்போதைய நிலை:
சாம்சன் தற்போது பிசிசிஐ தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வீரர்களுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க, பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் உள்ளார். அவர் செப்டம்பர் 9-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளது. அதற்கு முன்னர், அவர் கேரள கிரிக்கெட் லீக் போட்டிகளில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக ரூ. 26.8 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், இதுவே அந்த லீக் வரலாற்றில் அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சனைப் பற்றிய இறுதி முடிவை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நவம்பர் மாதத்தில் ஐபிஎல்-லின் தக்கவைப்பு காலக்கெடு வரை இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ளது. சாம்சனை தக்கவைக்குமா அல்லது விடுவிக்குமா என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுக்கும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ