)
India vs Australia 3rd ODI Highlights: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஓடிஐ போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாடினர். ஆஸ்திரேலிய அணியில் சேவியர் பார்ட்லட்டுக்கு பதில் நேதன் எல்லிஸ் விளையாடினார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 236 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஹர்ஷித் ராணா இந்திய பந்துவீச்சில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமா ரென்ஷா 56 ரன்களை அடித்தார். தொடர்ந்து 237 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி துரத்தியது. கடந்த போட்டியில் 73 ரன்களை அடித்து மிரட்டிய ரோஹித் சர்மா இன்றைய போட்டியிலும் அதே ஃபார்மை தொடர்ந்தார். தொடக்கத்தில் சுப்மான் கில் அவருக்கு இணையாக சில பவுண்டரிகளையும் அடித்தார்.
முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - கில் ஜோடி 69 ரன்களை சேர்த்தது. கில் 26 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். கடந்த இரண்டு போட்டிகளிலும் டக்அவுட்டாகியிருந்த விராட் கோலி, பேட்டிங்கில் சந்தித்த முதல் பந்தில் இருந்தே மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்பட்டார். ரோஹித் சர்மா ஏற்கெனவே செட்டிலானாலும் விராட் கோலி வந்ததும் இன்னும் நிதானமான ஆட்டத்திற்குச் சென்றுவிட்டார்.
அரைசதம் வரை பொறுமை காத்த ரோஹித் சர்மா, அதற்கு பிறகு சீற்றம் கண்டார். அதேபோல் மறுமுனையில் விராட் கோலியும் பவுண்டரிகளை அடித்தார். இந்த ஜோடி ஒரு ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியை அடித்து ரன்ரேட்டை 6 ரன்களில் பராமரித்தது. ரோஹித் சர்மா 63 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்து விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி இன்னும் வேகமாக ரன் அடித்தது. தொடர்ந்து 105வது பந்தில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். அரைசதம் அடித்து அடுத்த 42 பந்துகளில் அவர் அடுத்த 50 ரன்களை சேர்த்தார். நாதன் எல்லிஸ் வீசிய 39வது ஓவரின் மூன்றாவது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இந்தியா 69 பந்துகளை மீதம் வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹசில்வுட் மட்டுமே 1 விக்கெட்டை எடுத்தார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா 125 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 121 ரன்களையும், விராட் கோலி 81 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 74 ரன்களையும் சேர்த்தனர். இந்த ஜோடி 169 பந்துகளில் 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்க அதிகபட்ச வாய்ப்புள்ளது, இதற்கு பின் 2027இல்தான் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
-wicket victory in Sydney!
— BCCI (@BCCI) October 25, 2025
Up https://t.co/omEdJjQOBf#AUSvIND | #3rdODI pic.twitter.com/uK7BJJeAUT
அப்படியிருக்க, ரோஹித்தும், விராட்டும் ஆஸ்திரேலிய மண்ணில் தங்களின் கடைசி போட்டியை சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்துக்கொடுத்து ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தி உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இணைந்து ஓடிஐ அரங்கில் மட்டும் இதுவரை 5483 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் வென்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ