)
கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார். மேலும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஆகவும் செயல்பட்டு வருகிறார். சஞ்சு சாம்சன் கேப்டன்சி-யின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கையில் அடிபட்டதன் காரணமாக பாதி போட்டிகளில் இருந்து விலகினார் சஞ்சு சாம்சன். அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல் அணியை விட்டு சஞ்சு சாம்சன் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அணி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
RR SANJU SAMSON [Espn Cricinfo]
— Johns. (@CricCrazyJohns) August 7, 2025
- Samson has told the franchise he wants to be released ahead of the auction for IPL 2026.
- Franchise has not yet given him a definitive Answer.
- Decision will be taken by RR Owner in coordination with Rahul Dravid.
- As per the IPL… pic.twitter.com/UvwOoHceI7
சென்னை அணியில் சஞ்சு சாம்சன்?
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல் அணியில் இருந்து விலக இருப்பதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாகவும் கடந்த மாதங்களில் தகவல்கள் வெளியானது. அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சனை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற டி20 லீக்கின் போது சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இருப்பதால் பணத்தின் மூலம் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்க திட்டமிட்டதாகவும், ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பணத்திற்கு பதிலாக சென்னை அணியில் உள்ள இரண்டு வீரர்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மற்ற அணிகளும் ஆர்வம்
சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு வரும் வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் இல்லாமல், வேறு சில அணிகளும் அவர் மீது ஆர்வம் காட்ட தயாராக உள்ளன. அதில் மூன்று முறை சாம்பியன் பட்டம் என்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அடங்கும். அவர்களும் சஞ்சு சாம்சனை தங்கள் அணியில் எடுக்க ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட தான் அதிக விருப்பம் காண்பிப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல்லில் கொல்கத்தா அணியில் சஞ்சு சாம்சன் விளையாடி உள்ளார். ஆனால் பிளேயிங் லெவலில் இடம் பெற அவருக்கு வாய்ப்பு கிடைத்ததே இல்லை. சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இந்த இரு அணிகளும் ட்ரேடிங் மூலம் வாங்காத பட்சத்தில் சஞ்சு சாம்சன் மினி ஏலத்தில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல்லில் சஞ்சு சாம்சன்
2013 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்காக மொத்தம் 177 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 4700 ரன்களுக்கும் மேல் இதுவரை அடித்துள்ளார். இதில் 3 சதங்களும், 26 அரை சதங்களும் அடங்கும். சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டிக்கும் முன்னேறி இருந்தது. கடந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு தக்க வைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி ஓய்வு பெற உள்ளதால் அந்த இடத்தில் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. இதன் காரணமாக சஞ்சு சம்சனை எப்படியாவது அணியில் எடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் சென்னை அணியில் உள்ள அஸ்வின் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரையும் கேட்பதாக கூறப்படுகிறது. இதற்கு சென்னை அணி சம்மதம் தெரிவிக்கும் வகையில், இந்த ட்ரேடு சுமூகமாக அமையும். அப்படி இல்லை என்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ