)
IND vs SA, Shubman Gill Injury Update: இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஓடிஐ போட்டிகள், ஐந்து டி20ஐ போட்டிகள் ஆகிய மூன்று தொடர்களில் விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்டை வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது. அடுத்த போட்டியில் தோற்றாலும் கூட தொடரை தென்னாப்பிரிக்கா இழக்காது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. வரும் நவ. 22ஆம் தேதி போட்டி தொடங்க உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவிய இந்தியா அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அடுத்த போட்டியில் தோற்றால் 2-0 என்ற கணக்கில் வைட்வாஷ் ஆகும், டிராவானால் 1-0 என்ற கணக்கில் தொடரை இழக்க நேரிடும்.கடந்தாண்டு நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா வைட்வாஷ் ஆனது. அந்த தொடருக்கு பின் கடும் விமர்சனத்திற்கு உள்ளான இந்திய அணி தற்போது மீண்டும் அதே அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்தச் சூழலில், முதல் போட்டியிலேயே கேப்டன் சுப்மான் கில் கழுத்து சுளுக்கு காரணமாக வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 பந்துகளில் 4 ரன்களை அவர் அடித்திருந்தார். 3வது பந்தில் அவர் ஸ்வீப் ஷாட்டில் Square Leg திசையில் பவுண்டரி அடித்து, எழுந்திருக்கும்போது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டது.
அதன்பின், அவர் பேட்டிங் செய்யவே இல்லை. இந்திய அணி இரண்டு இன்னிங்ஸிலும் 10 பேட்டர்களுடன் (18 விக்கெட்டுகள்) பேட்டிங் செய்தது தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் சாதகமாக அமைந்தது, ஏனென்றால் வெறும் 30 ரன்கள் வித்தியாசத்தில்தான் அந்த அணி வெற்றி பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது. சுப்மான் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், முழு உடற்தகுதியை பெறவில்லை.
சுப்மான் கில் இல்லாத நிலையில், ரிஷப் பண்ட் கேப்டன்ஸி பொறுப்பை பார்த்துக்கொண்டார். சுப்மான் கில் டெஸ்ட் மட்டுமின்றி, ஓடிஐ அணியின் கேப்டனாகவும், டி20ஐ அணியின் துணை கேப்டனாகவும் செயல்படுகிறார். இதனால் சுப்மான் கில் எப்போது உடற்தகுதியை பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சுப்மான் கில் குறித்து பிசிசிஐ புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ இன்று மதியம் 12.35 மணிக்கு போட்டுள்ள X பதிவில், "கொல்கத்தாவில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாளில் இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அந்த நாளின் ஆட்டம் நிறைவுபெற்றதும், அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுப்மான் கில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு சுப்மான் நல்ல முறையில் குணமடைந்து வருகிறார். மேலும் இன்று (நவ. 19) இந்திய அணியுடன் கவுகாத்திக்கு பயணம் செய்கிறார். பிசிசிஐ மருத்துவக் குழுவால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். மேலும் 2வது டெஸ்டில் அவர் பங்கேற்பது குறித்து, சூழலை பார்த்து முடிவு எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ