கோலிக்கு கங்குலி செய்த துரோகம்! கங்குலிக்கு ஏற்பட்ட அதே நிலை!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 13, 2022, 12:50 PM IST
  • பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல்.
  • புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு.
  • அக்டோபர் 18 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.
கோலிக்கு கங்குலி செய்த துரோகம்! கங்குலிக்கு ஏற்பட்ட அதே நிலை! title=

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் மீண்டும் அதே பதிவியில் தொடர முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி பிசிசிஐ-யிடமிருந்து எந்த ஆதரவையும் பெறவில்லை மற்றும் அவரது மூன்று வருட வேலை செயல்படாததற்காக விமர்சிக்கப்பட்டார்.  கங்குலிக்கு பதிலாக இந்திய உலகக் கோப்பையை வென்ற முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட உள்ளார். பிசிசிஐ கங்குலிக்கு வேறு ஒரு பதவியை வழங்க முன் வந்தது.  ஆனால், அதை ஏற்க கங்குலி முன் வரவில்லை.  

பிசிசிஐ கங்குலியை இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) தலைவராக நியமிக்க முன்வந்தது, ஆனால் பிசிசிஐ தலைவராக இருப்பதை விட இது மிகவும் சிறிய பதவி என்பதால் கங்குலி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.  "கங்குலிக்கு ஐபிஎல் தலைவர் பதவி வழங்கப்பட்டது, ஆனால் அவர் அந்த வாய்ப்பை பணிவுடன் நிராகரித்தார். பிசிசிஐக்கு தலைமை தாங்கிய பிறகு பிசிசிஐ துணைக் குழுவின் தலைவராக இருப்பதை ஏற்க முடியாது என்பது அவரது தர்க்கம். அவர் பிசிசிஐ தலைவர் பதவியில் தொடர விருப்பம் தெரிவித்தார்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | இதெல்லாம் பிசிசிஐ தலைவராக கங்குலி செய்த சாதனைகளா?

விராட் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியை நீக்கியவர் கங்குலி தான்.  டி20 மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தானாக விலகினார் கோலி.  தற்போது கங்குலி பிசிசிஐயில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு விராட் கோலி ரசிகர்கள் அவரை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.  அக்டோபர் 18 ஆம் தேதி பிசிசிஐ ஏஜிஎம் கூட்டத்தின் போது ரோஜர் பின்னியிடம் கங்குலி பொறுப்பை ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குலி பிசிசிஐ பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், ஜெய் ஷா பிசிசிஐயின் கெளரவ செயலாளராக தொடர்ந்து பணியாற்ற உள்ளார்.  பிசிசிஐ செயலாளராக நீடிப்பதைத் தவிர, ஐசிசி வாரியக் கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை பிரதிநிதித்துவப்படுத்த கங்குலிக்கு பதிலாக ஜெய் ஷா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.  பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்த சமயத்தில் நிறைய சர்ச்சைகள் நடைபெற்றது. கோலிக்கு அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் அனைவரும் அறிந்ததே.  புதிய பிசிசிஐ தலைவர் இந்த இடைவெளியைப் போக்குவார் என்று நம்புவோம், மேலும் இந்திய கிரிக்கெட் புதிய உயரங்களை எட்டுவதைக் காண்போம்.

மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News