)
Syed Mushtaq Ali Trophy 2026: ஐபிஎல் 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற இருக்கிறது. மினி ஏலம் என்றாலே டிமாண்ட் இருக்கும் வெளிநாட்டு வீரர்களும், இந்திய வீரர்களும் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள்.
வரும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கேகேஆர் அணி (ரூ.64.3 கோடி), சிஎஸ்கே அணி (ரூ.43.4 கோடி) ஆகியவை அதிக தொகையுடன் வருகின்றன. இரு அணிகளுக்கும் வெளிநாட்டு வீரர்கள் எந்தளவிற்கு தேவையோ அதேபோல், இந்திய வீரர்களும் தேவையாக உள்ளனர். இவர்களுக்கு மட்டுமின்றி பிற அணிகளுக்கும் சிறந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், இந்திய ஆல்-ரவுண்டர்கள் தேவை இருக்கிறது. இந்தச் சூழலில்தான், வரும் நவ. 26ஆம் தேதி தொடங்க இருக்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை, உள்நாட்டு டி20 தொடராகும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தொடர், ஐபிஎல் ஏலத்திற்கு முன் தொடங்கும். இந்தாண்டு நவ. 26ஆம் தேதி தொடங்கி டிச. 18ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் எலைட் பிரிவில் மொத்தம் 32 அணிகள் உள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்படும், ஒவ்வொரு பிரிவிலும் தலா 8 அணிகள் இடம்பெறும்.
தமிழ்நாடு அணி எலைட் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் தமிழ்நாடு அணி உடன் டெல்லி, ஜார்க்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான், சௌராஷ்டிரா, திரிபுரா, உத்தரகாண்ட் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அனைத்து அணிகளும் தங்களின் பிரிவில் உள்ள மற்ற 7 அணிகளுடன் தலா 1 முறை மோதும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும். அடுத்து அரையிறுதி போட்டிகள், இறுதிப்போட்டி நடைபெறும்.
நடப்பு சாம்பியனான மும்பை அணி கடந்த எலைட் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் அசாம், சத்தீஸ்கர், கேரளா, ஒடிசா, ரயில்வேஸ், விதர்பா உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த முறை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மும்பை அணி சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரை வென்றது. ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் இந்த முறை சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பங்கேற்க இயலாது, அவர் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். எனவே, இந்த முறை அவர் ஓய்வில் இருப்பார்.
இந்நிலையில், தற்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யகுமார் யாதவ் இந்திய டி20ஐ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் நடைபெற இருப்பதால் அதற்கு முன் வரை சூர்யகுமார் யாதவ் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடுவார் எனலாம். குரூப் சுற்றில் மொத்தம் 7 போட்டிகள் உள்ளன. அதில் 7வது போட்டி டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த போட்டியை தவிர்த்து முதல் 6 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் மும்பை அணி செயல்படும்.
2026ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது என்பதால் சூர்யகுமார் யாதவிற்கு உள்நாட்டு போட்டிகள் அவரது பார்மை மீட்டெடுக்க நிச்சயம் கைக்கொடுக்கும் எனலாம். 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் சூர்யகுமார் யாதவ் 24 இன்னிங்ஸில் 19.71 சராசரியில் 210 ரன்களையே அடித்திருக்கிறார். அதிலும் இரண்டே அரைசதம்தான். எனவே, தனது பார்மை மீட்டெடுக்க சூர்யகுமார் இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ