)
India vs England Test Series: இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக, சர்ச்சைகள், சண்டைகள், ஆறுதல்கள் என போட்டி நடைபெற்ற ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு தீனியாக அமைந்தது. கடைசி போட்டி உள்பட ஒவ்வொரு போட்டியும் 5 நாள்கள் வரை நடைபெற்றது எனலாம்.
முதல் மற்றும் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி இந்தியாவின் கடுமையான போராட்டத்தால் டிராவில் முடிய 5வது போட்டிக்கு முன் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.
5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 224 ரன்களை அடிக்க, பதிலுக்கு இங்கிலாந்து 247 ரன்களை அடித்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சதம் அடிக்க, ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து 50 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக விரைவாகவே முடிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து அணி 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலும், இந்தியா 4 விக்கெட்டுகளை எடுத்தால் வெற்றி நிலையிலும் இன்றைய 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது.
பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே இன்று பந்துவீசினர். ஆட்டம் தொடங்கிய முதலிரண்டு பந்துகளில் ஜேமி ஓவர்டன் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து மிரட்டினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே சிராஜ் ஜேமி ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து அதற்கு அடுத்து சிராஜ் வீசிய ஓவரில் ஓவர்டனும் ஆடடமிழக்க ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது.
ஜாஷ் டங் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க அவரை பிரசித் கிருஷ்ணா வெளியேற்றினார். அவரை தொடர்ந்து, இடது தோல்பட்டையில் காயமடைந்த கிறிஸ் வோக்ஸ் வெறும் ஒற்றை கையில் பேட்டிங்கை செய்ய களம்கண்டது, பார்வையாளர்களுக்கு புல்லரிக்க வைத்தது. அட்கின்சன் சிராஜ் ஓவரில் சிக்ஸர் அடித்து அழுத்தத்தை மேலும் அதிகரித்தார். இதனால் இங்கிலாந்தின் இலக்கு ஒற்றை இலக்கத்திற்கு வந்தது. மேலும் இரண்டு ஓவர்களின் கடைசி பந்தில் அற்புதமாக சிங்கில்ஸ் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக்கொண்டார் அட்கின்சன்.
அப்டியிருக்க, 86வது ஓவரின் முதல் பந்திலேயே சிராஜ் அட்கின்சனை போல்டாக்க இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தியா ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரில் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. 2வது இன்னிங்ஸில் சிராஜ் 5, பிரசித் 4, ஆகாஷ் தீப் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
A thrilling end to a captivating ser#TeamIndia win the 5th and Final Test by 6 runs
— BCCI (@BCCI) August 4, 2025
https://t.co/Tc2xpWNayE
#ENGvIND pic.twitter.com/9ybTxGd61A
ஆட்ட நாயகன் விருதை முகமது சிராஜ் வென்றார். மேலும் இங்கிலாந்தின் தொடர் நாயகன் விருதை ஹாரி புரூக் மற்றும் இந்தியாவின் தொடர் நாயகன் விருதை சுப்மான் கில் வென்றார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை மற்றும் பட்டோடி பதக்கம் இரண்டும் இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுதான்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ