விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய வைபவ் சூர்யவன்சி.. என்ன சாதனை தெரியுமா?

Vaibhav Suryavanshi: இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி இணையத்தில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Dec 14, 2025, 11:56 AM IST
  • இந்திய U19 இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி
  • விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை
  • முழு விவரம்
விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய வைபவ் சூர்யவன்சி.. என்ன சாதனை தெரியுமா?

2025ஆம் ஆண்டு U19 ஆசிய கோப்பை நேற்று முன்தினம் (டிசம்பர் 12) முதல் தொடங்கி துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இத்தொடரில் இந்திய அணியின் வீரர் வைபவ் சூர்யவன்சி அசத்தி வருகிறார். ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அண்டர் 19 ஆசிய கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்சி படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சூர்யவன்சியின் இந்த ஆட்டம் அவரை இணையத்தில் அதிகமாக தேட வைத்திருக்கிறது. கூகுளில் அவரை தேடுவோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

Vaibhav Suryavanshi vs Virat Kohli: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சூர்யவன்சி 

இதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை முந்தி உள்ளார். போட்டி முடிந்த பின்னர் இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டது. உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் லிஸ்ட்டில் உங்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் நீங்கள் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளீர்கள். இந்த புகழை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டனர். 

இதற்கு பதில் அளித்த வைபவ் சூர்யவன்சி, நான் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எனது கவனம் முழுவதும் விளையாட்டில்தான் உள்ளது. ஆனால் மக்கள் என்னை தேடுகிறார்கள், என்னை பற்றி பேசுகிறார்கள் என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அவ்வளவுதான். அதன் பிறகு அதனை சிந்திப்பதில்லை. கடந்து சென்றுவிடுவேன் என கூறி உள்ளார். 

U19 Asia Cup 2025: இன்னும் பல சாதனைகள் படைப்பார் 

வைபவ் சூர்யவன்சி அடித்த இந்த 171 ரன்கள் மூலம் அவர் அண்டர் 19ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக அம்பத்தி ராயுடு 177 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் அந்த சாதனையை 2002ஆம் ஆண்டு படைத்தார். மேலும், வைபவ் சூர்யவன்சி ஒரு இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையை படைத்திருக்கிறார். ஆசிய கோப்பை அண்டர் 19ல் இந்திய அணி இன்று தனது இரண்டாவது போட்டியை விளையாடி வருகிறது. இப்போட்டியில் சூர்யவன்சி 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இருப்பினும் வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: இன்று பிறந்தநாள் கொண்டாடும் குல்தீப் யாதவ்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு - முழு விவரம்!

மேலும் படிக்க: CSK அணிக்கு இந்த 2 வீரர்கள் தேவையில்லை.. அதுக்கு பதிலா இவரை எடுத்தா நல்லா இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News