)
Virat Kohli IPL Retirement: ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த 18 சீசன்களாக விளையாடுபவர்கள் என்று எடுத்துக்கொண்டால் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மட்டும் தற்போது உள்ளனர்.
44 வயதான தோனி கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்று 5 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அவர் வரும் 2025 சீசனிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டனாக தொடர்வாரா அல்லது விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாடுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவர் 5 கோப்பைகளை வென்று கேப்டன் ஆவார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இம்பாக்ட் வீரராக செயல்படுகிறார். ஓபனிங் ஸ்பாடில் இவர் நிலையான வீரராக இருக்கிறார். அதேநேரத்தில், வரும் 2026 ஐபிஎல் சீசன் ரோஹித் சர்மாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தொடராகும். அவருக்கு தற்போது வயது 38 ஆகும். இவரும் 5 கோப்பைகளை வென்று கேப்டன் ஆவார்.
மறுபுறம் விராட் கோலி 2022ஆம் ஆண்டில் இருந்து, அதாவது கடந்த 4 சீசன்களில் அவர் ஓபனராக செயல்படுகிறார். விராட் கோலி தனது முதல் ஐபிஎல் கோப்பையையும் கடந்தாண்டுதான் பெற்றார். கோப்பையை வென்றதும் கண்ணீர்விட்டு கதறிய விராட் கோலி இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக ஆர்சிபி அணியுடனான வணிக ஒப்பந்தத்தை விராட் கோலி புதுப்பிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், அவர் ஆர்சிபி அணியுடன் நீண்ட காலம் பயணிக்க விரும்பவில்லை என்றும் விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து RevSportz தளத்தின் செய்தியாளர் ரோஹித் ஜூக்லன் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார்
தனது யூ-ட்யூப் சேனலில் பேசிய ஜூக்லன், "கடந்த முறை மெகா ஏலத்திற்கு முன்பு, அடுத்த ஐபிஎல் சீசன் (அதாவது 2026 சீசன்) தொடங்குவதற்கு முன்பு, விராட் கோலி ஒரு பிராண்டுடன் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் இப்போதைய செய்தி என்னவென்றால், அவர் தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இப்போது விராட் கோலியின் முகத்தைப் பயன்படுத்தாமல் ஆர்சிபி அணி தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட விரும்புகிறது என்ற ஊகம் எழுகிறது" என்றார்.
மேலும், கடந்தாண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு, ஆர்சிபி கேப்டன்ஸி அவருக்கு திருப்பி வந்தது என்றும் அதை ஏற்க மறுத்து, ரஜத் பட்டிதரை முன்மொழிந்து, அந்த பொறுப்பில் இருந்து பின்வாங்கிக் கொண்டதாகவும் ஜூக்லன் அந்த வீடியோவில் பேசியிருந்தார். இந்திய அணி கடந்த 2024ஆம் ஆண்டில் ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பின்னர், விராட் கோலி டி20ஐ-இல் இருந்து ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் தொடரில் இருந்து இந்தாண்டு ஓய்வு பெற்றார்.
இதன்மூலம் விராட் கோலி ஓடிஐ போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் மட்டுமே விளையாட உள்ளார் என்பது தெரிய வருகிறது. விராட் கோலி வரும் 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவதும் சந்தேகம். அப்படியிருக்க, விராட் கோலி ஓடிஐ போட்டிகளில் விளையாடும்வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார். அதில் இருந்து ஓய்வுபெற்றால் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வுபெற அதிக வாய்ப்புள்ளது.
இதுகுறித்து மேலும் பேசிய ஜூக்லன், "விராட் கோலி, எம்எஸ் தோனியைப் போல கிடையாது. நான் தோனியை விமர்சிக்கவில்லை; நான் சொல்வது என்னவென்றால், தோனி 2020இல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார், 2025ஆம் ஆண்டில் இன்னும் ஐபிஎல் தொடரில் தொடர்கிறார், 2026 இல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஐபிஎல் தொடரில் அதிக காலம் தொடர வாய்ப்பில்லை" என்றார்.
விராட் கோலி வரும் 2027ஆம் ஆண்டோடு ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெற அதிக வாய்ப்புள்ளது. 2028ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன் மெகா ஏலம் நடைபெறும் என்பதால் விராட் கோலி அப்போது ஓய்வை அறிவிக்கவே அதிக வாய்ப்புள்ளது. இதனால், விராட் கோலி 2026, 2027 ஐபிஎல் சீசன்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ