தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? சுரேஷ் ரெய்னா விளக்கம்

Suresh Raina : எம்எஸ் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துளார்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 27, 2025, 01:29 PM IST
  • தோனி அடுத்த ஐபிஎல் விளையாடுவாரா?
  • சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்?
  • சுரேஷ் ரெய்னாவின் ஓபன் டாக் பேட்டி வைரல்
 தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? சுரேஷ் ரெய்னா விளக்கம்

Suresh Raina : ஐபிஎல் 2025 தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இழந்திருக்கும் நிலையில், சுரேஷ் ரெய்னா ஒரு மிக முக்கியமான செய்தியை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி விளையாடுவாரா?, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு என்ன காரணம்?, சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக தோனி குறித்து அவர் தெரிவித்திருக்கும் கருத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Add Zee News as a Preferred Source

சுரேஷ் ரெய்னா பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடுவது குறித்து பேசிய ரெய்னா, ஐபிஎல் ஏலத்திலேயே சிஎஸ்கே தோற்றுவிட்டதாக கூறியுள்ளார். நல்ல பிளேயர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஏன் ஆர்வம் காட்டவில்லை என கேள்வி எழுப்பியிருக்கும் அவர், அதுதான் எனக்கும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார். கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற பிளேயர்கள் ஏலத்துக்கு வந்தும் அவர்களை ஏன் சிஎஸ்கே வாங்கவில்லை என கேட்டுள்ளார். இந்த ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை, முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அதேபோல் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தவறுகள்

சுரேஷ் ரெய்னா பேசும்போது, " தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் மற்ற பிளேயர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் ஏலத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுவிட்டது. மற்ற அணிகள் எல்லாம் நல்ல பிளேயர்களை வாங்க போட்டி போடும்போது, கையில் பணம் இருந்தும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ், ரிஷப் போன்ற பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் தோனியின் ஆலோசனைகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள் தான்.

சிஎஸ்கேவின் மோசமான ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும், என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார். சிஎஸ்கே நிச்சயம் கம்பேக் கொடுக்கும்" என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | CSK பிளேயிங் லெவனில் புது முகம்... பிளமிங்கிற்கே பிடித்த முரட்டு ஆல்-ரவுண்டர்!

மேலும் படிக்க | CSK: கம்பேக் கொடுக்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய அப்டேட்!

மேலும் படிக்க | CSK-வில் இந்த 3 பேர் வேண்டவே வேண்டாம்... வெற்றிகளை குவிக்க இதுவே ஒரே வழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News