)
மாநில நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கிணற்றை மூடியதை எதிர்த்து மாநில சாலை பணிகளை நிறுத்த கோரியும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையில் அமர்ந்து விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ மாநில சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை மதுரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் பல்வேறு விவசாயம் நிலங்கள் சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
2018 தமிழக அரசு நில எடுப்பு சட்டத்தின் படி விவசாய நிலத்திற்கு இழப்பீடு அரசு வழங்குகிறது. அதன் படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.1 லட்சம் மற்றும் கிணற்றிற்கு ரூ. 30 ஆயிரம் மட்டுமே தமிழக அரசு இழப்பீடாக வழங்குகிறது.
ஆனால், 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால், தற்போது வரை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை மற்றும் மாநில சாலை அமைக்கும் பணியும் நிறுத்தப்படவில்லை. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திடீரென 5 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளித்து வந்த ராஜ்குமார் என்ற விவசாயின் 112 அடி கிணற்றை மாநில சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மூடியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கிணற்றைக் காணவில்லை எனக் கூறி மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் எதிராக பதாகைகளை ஏந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ