)
TN Government 200 Unit Free Electricity: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளையிலே மூன்று திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார். அதாவது, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமெல்லாம் மின்சாரம் வழங்கப்படும் என்ற திட்டத்திற்கு விஜய் கையெழுத்து போட்டுள்ளார்.
மேலும், பெண்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவும் பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும் போதுமான பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை மாநில முழுவதும் உருவாக்கப்படும் இந்த திட்டத்திற்கும் கையெழுத்து போட்டு உள்ளார். அதோடு தமிழகத்தில் போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று விதம் 37 காவல் நிலையங்களும், ஒன்பது நகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தல ஒன்று விதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதை பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும் என்ற திட்டத்திலும் விஜய் கையெழுத்து போட்டு உள்ளார்.
இதில் ஏழை எளிய நடுத்தர மக்களின் கவனத்தை ஈர்த்தது 200 இலவச மின்சார திட்டம் தான். அதாவது 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர்களுக்கு பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. அதாவது தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவசம் மின்சார திட்டம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் 500 யூனிட்டுக்கு மேல் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்தினால் மட்டும்தான் 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படுமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்த விஜய், தற்போது 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் மட்டுமே 200 யூனிட் இலவசம் இத்தனை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியது.
இந்த நிலையில் தான் முதலமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே விஜய் மின்சார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் குறித்து அரசாணியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் வரும் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பது தெள்ளந் தெளிவாக தெரிகிறது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவசம் மின்சார திட்டமும் தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்டுக்கள் இலவசமாகவும், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்டுகள் இலவசமாகும் கணக்கிடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் மூலம், எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தினாலும், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனை செயல்படுத்தும் விதமாக, விஜய் முதல்வராக பதவியேற்றதும் தனது முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் இரண்டு மாதங்கள் 500 யூனிட் வரை மின்சார பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.
| 1) | யாருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்? | 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் |
| 2) | 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? |
100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் |
| 3) | 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு என்ன சலுகை? |
இவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டும் வழங்கப்படும் |