Tamil Nadu government Major announcement : தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Tamil Nadu government announcement : பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு, உயர்கல்விக்கான கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதேபோல், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கான வழிகாட்டல்களையும் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியாகியிருக்கும் மூன்று முக்கிய அறிவிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். அது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
முதல் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்ட அறிவிப்பின்படி "மாணவர்கள் குறை தீர்வு நாள்" கூட்டம் மூலம் மாணவ/மாணவிகளின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், மாணவர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் GDP கூட்டரங்கில் மாதத்தில் இரண்டு முறை என இரண்டாம் மற்றும் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமைகளில் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாணவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜுன் 2025 மாதம் முதல் அக்டோபர் 2025 வரை நடைபெற உள்ளது. இக்கூட்டம் 15 நாட்களுக்கு ஒரு முறை (மாதத்தில் இரண்டு முறை என இரண்டாம் மற்றும் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமைகளில்) நடைபெற உள்ளது.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவர்களின் பள்ளி, உயர்கல்வி சேர்க்கை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள்/ஆலோசனைகள்/குறைகள் நிவர்த்தி செய்யப்படும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து வகையான சான்றுகள் உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான வங்கி கடன் உதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவும்.
இரண்டாவது அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இசைப்பள்ளியில் 2025 -2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட இசைப்பள்ளியில் 2025 -2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை மே 5ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பள்ளியில் சேர்வதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதஸ்வரம், தேவாரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.
இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூபாய் 400/- உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ மாணவிகளுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும் வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோயில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
திருக்கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இப்பள்ளியில் தேவார இசைப் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது. ஆகவே, கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை, T- சவேரியார்புரம், சிலுவைபட்டி அஞ்சல், தூத்துக்குடி- 2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் 2025-2028 ஆம் கல்வியாண்டில் பிற் படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கான மாணவர் சேர்கை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 28 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள்-
அரசு பள்ளி மாணவர் விடுதி (பிவ), செங்கோட்டை மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (பிவ), சுவாமிநாதபுரம், மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (பிவ), பாவூர்சத்திரம், மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவியர் விடுதி (பிவ), ஆய்க்குடி, மாணவியர்களுக்கானது. அரசு பள்ளி மாணவியர் விடுதி (பிவ), மாதாபட்டணம், மாணவியர்களுக்கானது. அரசு பள்ளி மாணவியர் விடுதி (பிவ), வீரசிகாமணி, மாணவியர்களுக்கானது. அரசு பள்ளி மாணவியர் விடுதி (பிவ), வாசுதேவநல்லூர், மாணவியர்களுக்கானது. பள்ளி மாணவியர் விடுதி (பிவ). சோலைசேரி, மாணவியர்களுக்கானது. அரசு கல்லூரி மாணவர் விடுதி (பிவ) ஆலங்குளம், மாணவர்களுக்கானது. அரசு கல்லூரி மாணவர் விடுதி (பிவ), சுரண்டை, மாணவர்களுக்கானது. அரசு கல்லூரி மாணவியர் விடுதி நடுவக்குறிச்சி. மாணவியர்களுக்கானது. அரசு கல்லூரி மாணவியர் விடுதி (பிவ), சோலைசேரி. மாணவியர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (பி.வ) மாதப்பட்டணம். மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (பி.வ) ஊத்துமலை. மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (பி.வ) இடைகால். மாணவர்களுக்கானது.
அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள்-
அரசு பள்ளி மாணவர் விடுதி (மிபிவ), விஸ்வநாதபேரி, மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (மிபிவ), சோலைசேரி. மாணவர்களுக்கானது.
சீர்மரபினர் நல விடுதிகள் -
அரசு பள்ளி மாணவர் விடுதி (சீம), வீரகேரளம்புதூர். மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (சீம),வெள்ளாளங்குளம். மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (LD). வாசுதேவநல்லூர், மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர் விடுதி (சீம), சாயமலை. மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவர்விடுதி (சீம),நெல்கட்டும் செவல். மாணவர்களுக்கானது. அரசு பள்ளி மாணவியர் விடுதி (சீம), சங்கரன்கோவில். மாணவியர்களுக்கானது. அரசு பள்ளி மாணவியர் விடுதி (சீம), திருமலாபுரம். மாணவியர்களுக்கானது. அரசு தொழிற்பயிற்சி மாணவர் விடுதி (சீம), தென்காசி. மாணவர்களுக்கானது. அரசு தொழிற் பயிற்சி மாணவர் விடுதி (சீம), வீரகேரளம்புதூர். மாணவர்களுக்கானது. அரசு கல்லூரி மாணவர் விடுதி (சீம), சங்கரன்கோவில். மாணவர்களுக்கானது.
சிறுபான்மையினர் நல விடுதி - அரசு பள்ளி மாணவியர் (சிறு) கடையநல்லூர். மாணவியர்களுக்கானது. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர் / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ /மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ /மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொடுட்டு NEET/JEE நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ /மாணவியருக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ /மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போர்வைகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்
பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ /மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2025 க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2025 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ /மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பள்ளி / கல்லூரி மாணவ /மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ