தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்வு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரிப்பு...!

Last Updated : Jul 28, 2020, 07:29 PM IST
தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்வு! title=

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரிப்பு...!

தமிழகத்தில் இன்று மேலும் 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,659 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 6,908 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 64 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 6,972 பேரில் சென்னையில் மட்டும் 1,107 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 119 ஆய்வகங்கள் (அரசு - 58 மற்றும் தனியார் - 61) உள்ளன. அதில், இன்று மட்டும் 61,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 24,75,866 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா வைரஸ் உறுதியானவர்களில்,  4,233 பேர் ஆண்கள், 2,739 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,38,163 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 89,502 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 4,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,956 ஆக உள்ளது.

ALSO READ | மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் கைரேகை ஸ்கேன் முறை அமல்

Image

Image

தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,659 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 11,379 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,88,015 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28 ஆயிரத்து 294 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 

சென்னையில் 1,107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, விருதுநகரில் 577 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும், செங்கல்பட்டில் 365 பேருக்கும், மதுரையில் 346 பேருக்கும், தேனியில் 283 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 769 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, ராணிப்பேட்டையில் 418 பேரும், விருதுநகரில் 413 பேரும், தூத்துக்குடியில் 319 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், திருவள்ளூரில் 303 பேரும், கோவையில் 296 பேரும், செங்கல்பட்டில் 249 பேரும், தேனியில் 213 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

 

Trending News