நீலகிரியில் ஆட்சியர் வீட்டில் புகுந்த சிறுத்தை
நீலகிரியில் ஆட்சியர் வீட்டில் சிறுத்தை புகுந்த வீடியோ வைரலாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் அருகே உலா வருவது வழக்கம்.
மேலும் படிக்க | நண்பரின் கனவை நனவாக்கும் செல் முருகன் - விவேக் நினைவு நாளில் தொடங்கப்பட்ட திட்டம்
இந்நிலையில் உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஏழு வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைபுலி ஒன்று நுழைந்துள்ளது. ஆட்சியர் குடியிருப்பு நுழைவாயிலில் சிறுத்தைஒய்யாரமாக நடந்து சென்றுள்ளது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வாசலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அந்த சிறுத்தை புலி மீண்டும் பின்வாசல் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | விபரீதத்தில் முடிந்த ஆன்லைன் ரம்மி...கல்லூரி மாணவர் தற்கொலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR