)
காசா மீதான போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் சென்னை புதுப்பேட்டை முதல் எழும்பூர் வரை பேரணியாக சென்றனர். அதனை தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹுருல்லா, தவாக தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கி.ராம்கிருட்டிணன் நெல்லை முபாரக், தனியரசு, கருணாஸ் உள்ளிட்ட 31 பெரியாரிய உணர்வளர்கள் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சி, இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட திரைக்கலைஞர்களும் பங்கேற்றனர்.
நாங்கள் நிழல் ஹீரோக்கள்
இதில் பேசிய நடிகர் சத்யராஜ், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். இது எனது கடமை. மனிதர்களை கொலை செய்ய விஞ்ஞானத்தை பயன்படுத்தி வருகிறார்கள். முழுமையாக அவர்கள் மனிதன் ஆக வில்லை பாதியில் அவர்களுக்கு மூளை வளரவில்லை.இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை போகிறது.
சென்னையில் பேரணி நடத்தினால் அங்கு போரை நிறுத்துவார்களா என கேட்கலாம். சமூக ஊடகம் மூலம் அது சாத்தியம் ஆகும். இந்த போன்று கூட்டத்தில் கலந்து கொள்வது எங்களை போன்ற கலைஞர்களுக்கு கடமை. அப்படி இல்லை என்றால் நாங்கள் கலைஞர்களே இல்லை. இங்கு இருப்பவர்கள் எல்லாம் தான் நிஜ ஹீரோ. நாங்கள் எல்லாம் நிழல் ஹீரோ. இது இஸ்லாமியர்களாக கூடிய கூட்டம் அல்ல. மனித நேயம் அடிப்படையில் இந்த கூட்டம் கூடி நடத்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இனப்படுகொலயை தடுத்து நிறுத்த வேண்டும் அது தான் முக்கியம் என அவர் கூறினார்.
மோடியும் காரணம்
நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பது அரசியல் என்றால், நாங்கள் அதை செய்வோம். இந்த நாட்டை விற்றவர்கள் யார் என தெரியாது. ஆனால் அதற்கு விலை கொடுத்தது யார் எனத் தெரியும். நாம் தொடர்ந்து போராட வேண்டும். வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் அல்ல அமெரிக்காவும் காரணம், அமைதியாக இருக்கும் பிரதமர் மோடியும் காரணம். இந்த விவகாரத்தில் போசாமல் இருக்கும் ஒவ்வொரு மனிதரும் காரணம் என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ