ஜம்மு காஷ்மீர் அருகே உள்ளது பகல்காம். புகழ்பெற்ற சுற்றுலா தளமான பகல்காம் பைன் மரக்காடுகள் அடர்ந்திருக்கும் ஒரு பகுதி ஆகும். இந்த பகுதி இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது. நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 22) திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ளது.
இதில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளின் அடையாள அட்டை மற்றும் மதம் கேட்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களுக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த கொடூர சம்பவம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீருக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அதிலும் காஷ்மீரில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கு அமைந்துள்ள ரெசார்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலா பயணமாக இருந்து வருகிறது. இந்த இடத்தில் இராணுவ வீரர்களின் உடையில் இருந்த சிலர் ஆணகளை மட்டும் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து உள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனத்தையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா தன்னுடய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், பகல்காமிற்கு நானும் சுற்றுலா பயணியாக சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது.
ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களுக்காகவும் என் இதயம் உடைகிறது. நமது நாடு மத ரீதியாக அதிகம் பிரிந்து அணி திரட்டப்படும் ஒரு சூழலில் ஒரு குறிப்பிட்ட மதம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை திசை திருப்பாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தைப் சொல்பவள் அல்ல. ஆனால் இந்த சூழலில் இதைச் சொல்ல வேண்டும் என்று உணர்ந்தேன். இங்கே வெறுப்புக்கு இடம் இல்லை, எனது பதிவில் பின்னோட்ட பகுதியிலும் இல்லை, நம் உலகிலும் இல்லை என கூறி உள்ளார். இந்த பதிவில் அவர் பகல்காமிற்கு சுற்றுலா சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
மேலும் படிங்க: பகல்காம் தாக்குதல் சம்பவம்.. தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!
மேலும் படிங்க: மதத்தை உறுதிசெய்ய பேண்டை கழற்ற சொன்ன தீவிரவாதிகள்.. கண்ணீர்விடும் குடும்பத்தினர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ